விவேகானந்தர் 150-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஜன.26-ம் தேதி சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள்-மாணவர்கள் கொண்ட 10 குழுக்களாக 150 கிராமங்களுக்கு சைக்கிள் பேரணியாக சென்று விவகானந்தரின் கருத்துகளை பரப்புகின்றனர்.
இதுகுறித்து பள்ளி தாளாளர் சி.ஆர்.லட்சுமிகாந்தன் தெரிவித்ததாவது:
பேரணியில் விவகானந்தரின் உருவப்படங்கள் மற்றும் பொன்மொழிகள் அடங்கி பதாதைகளுடன் கிராமங்களுக்கு சென்று விவகாந்தரின் கருத்துகள் மற்றும் பெருமைகளை துண்டு பிரசுரங்கள் வழங்கியும், வீடியோ காட்சி மற்றும் பாடல்கள் வாயிலாக எடுத்துரைப்பார்கள் பேரணியை உதவிஆட்சியர் எம்.அரவிந்த் தொடங்கி வைக்கிறார். கிராமங்களில் ஆங்காங்கே கிராமத் தூய்மை மற்றும் துப்புரவு தொடர்பான பணிகளிலும் மாணவர்கள் ஈடுபடுவார்கள் என சி.ஆர்.லட்சுமிகாந்தன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...