புதுவை வேலைவாய்ப்பு அலுவலக இணைய தளத்தின் மூலம் புதிதாக பதிவு செய்யும் நேரலை சேவையை முதல்வர் ரங்கசாமி நேற்று துவக்கி வைத்தார். முதல்வர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் துறை அமைச்சர் ராஜவேலு, தொழிலாளர்துறை செயலர் மீனா, இயக்குனர் ஸ்ரீனிவாஸ், துணை ஆணையர் தம்மு கணபதி, புதுவை தேசிய தகவல் மைய இயக்குனர் ராஜசேகரன், தொழில் நுட்ப இயக்குனர் கோபிசுவாமிநாதன், தொழில் நுட்ப அதிகாரிகள் கிருஷ்ணமூர்த்தி, ஆனந்தகுமார், வேலை வாய்ப்பு அதிகாரி அனிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வேலைவாய்ப்பு அலுவலக இணையதளம் மூலம் பதிவு, புதுப்பித்தல் மற்றும் பணி இடங்களுக்கான தகுதியுள்ள பதிவு செய்த நபர்களின் பட்டியல் தயாரித்தல் ஆகிய பணிகள் நவீனப்படுத்தப்பட்டுள்ளன. புதுவை மாநிலத்தில் அனைத்து பகுதிகளில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் தொழிலாளர் துறையின் இணையதளமான
லீttஜீ://றீணீதீஷீuக்ஷீ.ஜீஷீஸீபீவீநீலீமீக்ஷீக்ஷீஹ்.ரீஷீஸ்.வீஸீல்
தங்கள் பதிவுகளை நேரலை மூலம் புதுப்பித்து கொள்ளும் வசதி கடந்த ஆண்டு ஏம்பல் 1ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டு இயங்கி வருகிறது. இந்த சேவை மூலம் புதுவை மாநிலத்தை சேர்ந்த 1342 பேர் பயன் பெற்றனர்.
இந்த சேவையை தொடர்ந்து இன்று முதல் புதிதாக பதியும் நேரலை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் புதிதாக பதிபவர்களுக்கு கால விரயம் குறைகிறது. இந்த சேவையை அனைத்து பகுதியில் உள்ளவர்களும் பயன்படுத்தி கொள்ளலாம் என தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.
முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...