தேசிய ஊரக வேலை உறுதி திட்ட வழிகாட்டும் குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி 801 கணினி உதவியாளர்கள் பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றிட அரசு கேட்டுள்ள விவரங்களை இயக்குநர் உடனே அனுப்பி வைத்து அரசாணை வெளியிட வேண்டும்.
801 கணினி உதவியாளர் பணியிடம் போக மீதமுள்ளவர்களுக்கு அவர்களது வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு உடனே ஊதியத்தினை ரூ. 15 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் திண்டுக்கல், விழுப்புரம், கடலூர், தி.மலை, மதுரை, வேலூர், திட்டக்குடி, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 9 மாவட்டங்களில் தனியார் நிறுவனங் கள் மூலம் பணியமர்த்தப்பட்டு கணினி உதவியாளர்களையும் சேர்த்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சிதுறை கணினி உதவியாளர்கள் சங்கம் சார்பில் விழுப்புரம் பெருந்திட்ட வளாகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநிலத்தலைவர் தமிழ்வாணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வெங்கடசுப்ரமணியன் முன்னிலை வகித்தார். கடலூர் செந்தில், தி.மலை யுவராஜன், வேலூர் யுவராஜ், காஞ்சிபுரம், சுதாகர், திருவள்ளுர் நாகேந்திரன், விழுப்புரம் மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஊரக வளர்ச்சித்துறை கணினி உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் மண்டல அளவிலான ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்தது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...