நூறு வயது மூதாட்டியைப் பராமரித்து வருவதற்காக மதுரை மாவட்டம்
இடையப்பட்டியில் 6-வது படிக்கும் மாணவி அர்ச்சனாவுக்கு ஹோப் ஹீரோ என்கிற
விருது வழங்கப்பட்டது.
இந்த மாணவி அந்தப் பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் படித்து
வருகிறார். அந்த ஊரிலேயே உள்ள பெரியாண்டி என்னும் மூதாட்டி குளிக்கவும்,
உணவருந்தவும் உதவி செய்துவருகிறார்.
அவரது மனிதாபிமானத்தைப் பாராட்டி அவருக்கு திரிபுரா அறக்கட்டளை சார்பில் இந்த விருது வழங்கப்பட்டது.
சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருது வழங்கப்பட்டது.
அதேபோல், பாம்பிடம் இருந்து சிறிய குழந்தையைக் காப்பாற்ற உதவியதற்காக
வேலூர் மாவட்டம் மீஞ்சூரைச் சேர்ந்த விஷாலானி என்கிற சிறுமிக்கும், பள்ளியை
விட்டு இடையிலேயே நின்ற சக வகுப்புத் தோழனை தொடர்ந்து படிக்க உதவி
செய்ததற்காக கோவை மாவட்டம் பன்னிமடையைச் சேர்ந்த மைதின் ராஜ் என்கிற
சிறுவனுக்கும் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.
திரிபுரா அறக்கட்டளை சார்பில் இந்தியா முழுவதும் பள்ளிச் செல்லும்
குழந்தைகளுக்காக 86 டியூஷன் சென்ட்டர்கள் நடத்தப்படுகின்றன. இதில் 3
ஆயிரத்துக்கும் அதிகமான ஏழைக் குழந்தைகளுக்கு யோகா உள்ளிட்ட பல்வேறு
பயிற்சிகள் வழங்கப்படுவதாக இந்த அறக்கட்டளையின் இயக்குநர் இலைன் கூப்பர்
கூறினார்.
இந்த மையங்களில் படிக்கும் குழந்தைகளை ஊக்குவிப்பதற்காக இந்த ஹோப் ஹீரோ விருது வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...