"தொகுப்பூதிய பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம்
மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும் என, இரண்டு அம்ச
கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பிப்.6ல், மாவட்ட தலைநகரங்களில்
ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளதாக, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க
மாநில பொதுச் செயலாளர் இரா. பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: சத்துணவு ஊழியர்கள்,
அங்கன்வாடி பணியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள் ,
27 ஆண்டுகளாக தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். அதேபோல்,
மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணிவழங்க வேண்டும், கம்ப்யூட்டர்
இயக்குனர்கள், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பணிபுரியும் "டைப்பிஸ்ட்"களுக்கு
காலமுறை ஊதியம் மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி,
பிப். 6ல், மாநில அளவில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஊர்வலம் மற்றும்
ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
அதன் பிறகும் அரசு செவி சாய்க்கவில்லையெனில்,
பிப். 16ல், சென்னையில் நடக்கவுள்ள மாநில செயற்குழு கூட்டத்தில்,
அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...