தமிழக கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள
3,589 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்வை ரத்து
செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், புதிய அறிவிப்பாணை
வெளியிட்டு, தேர்வுகளை நடத்தியே ஆட்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும்
உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வில்சன்
தாக்கல் செய்த மனு: கூட்டுறவு நிறுவனங்களில், உதவியாளர் பணியிடத்துக்கான
நேரடி நியமனம் குறித்த அறிவிப்பாணை நவம்பர் 2, 2012ல் வெளியானது. "மொத்தம்
3,589 காலியிடங்கள் நிரப்பப்படும். விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி,
நவம்பர் 23, 2012" என தெரிவிக்கப்பட்டது.
இதற்கான தேர்வு டிச., 9, 2012 அன்று
நடத்தப்பட்டது. டிச., 20, 2012ல் தேர்வு முடிவுகள் வெளியானது. உதவியாளர்
பணி நியமனத்தில் வெளிப்படை தன்மை கடைபிடிக்கவில்லை. கூட்டுறவு துறை ரீதியான
பயிற்சி பெறாதவர்களும் நியமிக்கப்பட்டனர். ஜாதி வாரியான ஒதுக்கீடு, தமிழ்
மீடியத்தில் படித்தவர்களுக்கான இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படவில்லை.
தேர்வு முறையில், விதிமீறல்கள் இருந்தன. எனவே,
தேர்வை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டிருந்தது. வழக்கை
விசாரித்த, நீதிபதி சுப்பையா, "ஆவணங்களை பார்க்கும் போது உதவியாளர்
பணிக்கான தேர்வில், முறைகேடுகள் நடந்திருப்பதாக தெரிய வருகிறது. எனவே,
தேர்வு ரத்து செய்யப்படுகிறது. புதிதாக அறிவிப்பாணை வெளியிட்டு, முறைப்படி
தேர்வு நடத்தியே பணியிடங்களை நிரப்ப வேண்டும்" என உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...