ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான
உயர் கல்வி உதவித்தொகை திட்ட நிதி ஒதுக்கீடு இந்த ஆண்டு ரூ.936 கோடியாக
உயர்த்தப்பட்டுள்ளதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேரவையில் ஆளுநர் கே.ரோசய்யா ஆற்றிய உரை:
2013-14-ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியின மாணவர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் ரூ.396
கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதி ஒதுக்கீடு ரூ.936 கோடியாக
உயர்த்தப்பட்டுள்ளது.
உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் பயனை தனியார் கல்லூரிகளில் பயிலும்
ஆதிதிராவிடர் மற்றும் மாணவர்களுக்கும் விரிவுப்படுத்திய அரசின் முடிவு,
கல்விப் புரட்சியை ஏற்படுத்தியதோடு, இந்த மாணவர்களையும் உயர்கல்வி
நீரோட்டத்திற்குள் கொண்டுவந்துள்ளது.
சமுதாயத்தில் மிகவும் பின்தங்கியுள்ள பிரிவுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான
ஏழை மாணவர்களுக்கு புதியதொரு வாய்ப்பை வழங்கியிருக்கும் அரசின் முடிவை
வரவேற்கிறேன்.
இது தவிர, இந்த மாணவர்களுக்கான தங்குமிட வசதிகளை மேம்படுத்தி, அவர்கள்
கல்வி பயில்வதற்கு நல்ல சூழலை ஏற்படுத்திட நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதும்
மன நிறைவை அளிக்கிறது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...