செவிலியர் பயிற்சி மாணவியருக்கு வழங்கப்பட்டு வரும் உதவித் தொகையை உயர்த்தி வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையிலுள்ள அரசு பொது மருத்துவமனை, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய அரசு மருத்துவமனைகளில் உள்ள செவிலியர் பயிற்சி பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டு வகுப்பிலும் 645 பேர் அரசு பயிற்சி உதவித் தொகை பெற்று வருகின்றனர்.
இந்தப் பயிற்சிப் பள்ளிகளில் செவிலியர் பட்டயப் படிப்பு பயிலும் அரசிடமிருந்து உதவித் தொகை பெரும் செவிலியர் பயிற்சி மாணவியர்களை ஊக்குவிக்கும் வகையில் தற்போது வழங்கப்படும் முதலாம் ஆண்டு கல்வி உதவித் தொகை, 400/-ரூபாயிலிருந்து 600/-ரூபாய் ஆகவும், இரண்டாம் ஆண்டு உதவித் தொகை 440/-ரூபாயிலிருந்து 700/- ரூபாயாகவும், மூன்றாம் ஆண்டு உதவித் தொகை 480/-ரூபாயிலிருந்து 800/-ரூபாயாகவும் உயர்த்தி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால் அரசுக்கு ஆண்டொன்றிற்கு கூடுதலாக 60 லட்சத்து 37 ஆயிரத்து 200 ரூபாய் செலவினம் ஏற்படும். மொத்தம் 1,935 மாணவியர்கள் ஆண்டுதோறும் பயன் பெறுவார்கள்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...