2005-ம் ஆண்டுக்கு முன்பு வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை இப்போதே வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
முன்னதாக ஏப்ரல் 1-ம் தேதிக்கு பிறகு இந்த நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளுமாறு ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டிருந்தது.
இந்நிலையில் பொதுமக்களின் வசதியைக் கருத்தி கொண்டு இப்போதுமுதலே வங்கிகளில்
ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதற்கு ஜூலை 1-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டது. இப்போது ஜூலை 1-ம் தேதிக்குப் பிறகும் பொதுமக்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளில் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.
2005-க்கு முந்தைய ரூபாய் நோட்டுகளில் பாதுகாப்பு அம்சங்கள் குறைவு. எனவே கள்ள நோட்டுக்களை கட்டுக்குள் கொண்டுவர இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இது ஒரு சர்வதேச நடைமுறை. பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.
2005-க்கு முன்பு வெளியான நோட்டுகளின் பின்பக்கத்தில் அச்சடிக் கப்பட்ட ஆண்டு விவரம் இருக்காது. 2005-க்கு பின் வெளியிடப்பட்ட நோட்டுகளின் பின்பக்கத்தில் கீழ்பகுதியின் நடுவில் சிறிய வடிவில் அச்சடிக்கப்பட்ட ஆண்டின் விவரம் இருக்கும். இதை வைத்து பழைய நோட்டுக்களை அடையாளம் கண்டுகொள்ளலாம்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...