தமிழ்நாட்டில் 60 க்கும் மேற்பட்ட அரசுக்கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரி களில் படிக்கும் மாணவர்கள் வளாகத்தேர்வு உட்பட பல்வேறு தேர்வுகளில், தனித்திறன் வெளிப்பாட்டில் "கோட்டை" விடுவதால், வேலைவாய்ப்பு பெறுவதில் சிக்கல் நிலவுகிறது. இதனையடுத்து, அரசு கல்லூரி மாணவர்களின், தனித்திறன் மேம்படுத்த "சிறப்பு தனித்திறன் மேம்பாட்டு பயிற்சி மையம்" அமைக்க மாநில அளவில் 30 அரசுக்கல்லூரிகளை தமிழ்நாடு அரசு தேர்வு செய்துள்ளது.
இப்பட்டியலில், உடுமலை அரசு கலைக்கல்லூரியும் இடம் பெற்றுள்ளது. இத்திட்டத்தில், மாநில அரசின் "தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் சார்பில்" இம்மையங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு, பல்வேறு சிறந்த நிறுவனங்களின் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இது குறித்து உடுமலை அரசு கலைக்கல்லூரி முதல்வர் அன்பழகன் கூறியதாவது:
அரசுக் கல்லூரிகளில், மாணவர்களின் வேலை வாய்ப்பு முக்கிய தேவையாக உள்ளது. தனியார் கல்லூரிகளில் மாணவர் களின் தனித்திறன்களை மேம்படுத்தவும், நேர்முகத் தேர்வு எதிர்கொள்வது குறித்தும் மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அரசு கல்லூரி மாணவர்கள் மூன்றாம் ஆண்டு தொடங் கும் முன்னரே வேலை வாய்ப்பை பற்றிய அச்சத்தினால் தங்களின் தன்னம்பிக்கையை இழக்கின்றனர்.
தங்கள் படித்த படிப்பிற்கு ஏற்ற பணியை தேர்வு செய்வது, நேர்முகத் தேர்வில் நடந்து கொள்ளும் முறைகள், முதல்நிலை தேர்வுகளை எதிர்கொள்வது ஆகியவற்றில் போதிய பயிற்சி இல்லாததால், பல மாணவர் களுக்கு திறமை இருந்தும் பயனில்லாமல் போய்விடுகிறது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு "சிறப்பு தனிதிறன் பயிற்சி மையம்" அமைக்கவுள்ளது. மையத்தில், பல்வேறு சிறப்பு பயிற்சிகள் தனியார் நிறுவனத்தின் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும். முதற்கட்டமாக பிப்., மாதத்தில் "இன்டெல்" நிறுவனத்தின் மூலம் கல்லூரியிலுள்ள 30 பேராசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடக்கும். பின்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...