எஸ்எஸ்எல்சி பொது தேர்வு தொடங்கும்
நேரத்தை காலை 9.15 மணி என மாற்றியதால், குறித்த நேரத்தில் தேர்வு மையத்துக்கு வர முடியாமல் கிராமப்புற மாணவ,
மாணவியர்கள் கடும் அவதிப்பட்டனர். பலர் தேர்வு
மையத்துக்கு மூச்சு வாங்க ஓடிவந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 136 தேர்வு மையங்களில் 50,140 மாணவ, மாணவியர்கள் நேற்று தமிழ் முதல்தாள் தேர்வு எழுதினர். வழக்கமாக,
10ம் வகுப்பு பொதுத் தேர்வு காலை 10 மணிக்கு துவங்கும். இவ்வாண்டு காலை 9.15 மணிக்கு தேர்வு தொடங்கும் என அரசு அறிவித்துள்ளது. இதற்கு பல்வேறு
ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தும், அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், நேற்று காலை 9.15 மணிக்கு பொதுத் தேர்வு தொடங்கியது.
இம்மாவட்டத்தில், 250 அரசு உயர்நிலை பள்ளிகள்
கிராமப்புறங்களில் உள்ளன.
இந்த உயர்நிலை பள்ளிகளில் தேர்வு மையம்
இல்லாததால் இங்கு பயிலும் மாணவ, மாணவியர் அருகில் உள்ள அரசு மேல்நிலைப்
பள்ளிகளில் உள்ள தேர்வு மையத்துக்கு தேர்வு எழுத செல்ல வேண்டும்.
மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களுக்கு
பஸ் வசதி கிடையாது. இந்நிலையில் காலை 9.15 மணிக்கு தேர்வு
தொடங்கியதால் கிராமங்களில் இருந்து தேர்வு மையத்துக்கு குறிப்பிட்ட நேரத்தில்
செல்ல முடியாமல் பள்ளி மாணவியர்கள் தவித்தனர்.
உதாரணமாக, உளுந்தை, எரயாமங்களம் அரசு பள்ளிகளில் பயிலும்
மாணவர்கள், 14 கி.மீட்டர் தூரமுள்ள பேரம்பாக்கம்
பள்ளிக்கும், செஞ்சி, ஏகாட்டூர் உயர்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 6 கி.மீட்டர் தூரமுள்ள கடம்பத்தூருக்கும், பெரிய களக்காட்டூர் பள்ளி மாணவர்கள் திருவாலங்காடு பள்ளிக்கும்
பொதுத் தேர்வு எழுத செல்ல வேண்டும்.
இதில் செஞ்சி, ஏகாட்டூர், பெரிய களக்காட்டூர் ஆகிய
கிராமங்களுக்கு முற்றிலும் பஸ் வசதி கிடையாது. இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள்
பொது தேர்வு எழுத தேர்வு மையத்திற்கு நடந்துதான் செல்ல வேண்டும். இவர்கள் தேர்வு
நேர மாற்றத்தால், காலை 6 மணிக்கெல்லாம் தங்களது வீட்டில் இருந்து புறப்பட வேண்டியுள்ளது.
இதுகுறித்து எரயாமங்களம் பள்ளி மாணவி
ராணி கூறுகையில், எங்கள் பள்ளியில் மொத்தம் 20 மாணவர்கள் 10ம் வகுப்பு பொது தேர்வு எழுத
பேரம்பாக்கம் செல்ல வேண்டியுள்ளது.
தற்போது 9 மணிக்கெல்லாம் தேர்வு மையம் செல்ல வேண்டி உள்ளது. இதனால் நாங்கள்
காலை 6 மணிக்கு கிராமத்தில் இருந்து மப்பேடு வரை 4 கி.மீட்டர் தூரம் நடந்து சென்று, அங்கிருந்து 10 கி.மீட்டர் தூரமுள்ள
பேரம்பாக்கத்திற்கு ஷேர் ஆட்டோக்களில் தேர்வு எழுத செல்கிறோம். நேர மாற்றத்தால்
காலை உணவும் சாப்பிட முடியாத நிலை உள்ளது என்றனர்.
எனவே கிராமப்புற மாணவ, மாணவியர் நலன் கருதி, பொதுத் தேர்வு தொடங்கும் நேரத்தை
மாற்றி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...