சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த 5-ஆம் வகுப்பு மாணவன் 300 ஆண்டுகளுக்கான கிழமைகளை பார்க்காமல் கூறுகிறார்.சென்னை வேளச்சேரி நேதாஜி காலனியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் ஸ்ரீராம் பாலாஜி (12). இவர், கிண்டி ஐ.ஐ.டி.யில் உள்ள கேந்திர வித்யாலயத்தில் 5-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர், 1900-ஆம் ஆண்டு முதல் 2200-ஆம் ஆண்டு வரையுள்ள நாள்களின் கிழமைகளை பார்க்காமல் சொல்கிறார்.
இது குறித்து, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீராம் பாலாஜியின் தந்தை வேலுச்சாமி கூறியது:
ஸ்ரீராம் பாலாஜி கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறான். அவனுக்கு இந்தத் திறமை இருப்பது கடந்த 2011-ஆம் ஆண்டு டிசம்பரில் எங்களுக்கு தெரியவந்தது. அப்போது 2000-ஆம் ஆண்டு முதல் 2038-ஆம் ஆண்டு வரையுள்ள 38 ஆண்டுகளுக்கான கிழமைகளை பார்க்காமல் கூறினான். பின்னர், கடந்த 2013-ஆம் ஆண்டு 200 (1900-2100) ஆண்டுகளின் கிழமைகளை பார்க்காமல் சொன்னான். தற்போது 300 (1900-2200) ஆண்டுகளின் கிழமைகளை பார்க்காமல் சொல்கிறான் என்றார்.
ஸ்ரீராம் பாலாஜி கூறுகையில், "செல்போனில் உள்ள காலண்டரைப் பார்த்து தேதிகளுக்கான கிழமைகளை கற்றுக் கொண்டேன். தினமும் 3 மணி நேரம் வரை செல்போனில் உள்ள காலண்டர் பார்ப்பேன். தற்போது 300 ஆண்டுகளின் கிழமைகளை பார்க்காமல் சொல்வேன்' என்றார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...