இதன் மூலம் உலக
சுகாதார அமைப்பால்
தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள
11வது நாடுஇந்தியாவாகும்.இதற்கான சான்றிதழை புது
தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் உலக
சுகாதார அமைப்பின்
அதிகாரிகளிடம் இருந்து இந்திய சுகாதாரத்துறை அமைச்சர்
குலாம் நபி
ஆஸாத் பெற்றுக்
கொண்டார்.
இதுகுறித்து குலாம் நபி
ஆஸாத் கூறியதாவது:
இந்தியாவில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல்
போலியோ ஒழிக்கப்பட்டு
விட்டது. இந்தியாவில்
ஒவ்வோர் ஆண்டும்
50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள்
போலியாவால் பாதிக்கப்பட்டிருந்தபோது கடந்த
1995ஆம் ஆண்டு
போலியோவை முழுவதுமாக
ஒழிக்கும் திட்டம்
தொடங்கப்பட்டது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போலியோ
சொட்டு மருந்து,
இந்தத் திட்டத்திற்காக
அரசு நிதி
ஒதுக்கியது, திட்டத்துக்கான தீவிர கண்காணிப்பு மற்றும்
உயர் அதிகாரிகளின்
அயராத முயற்சி
போன்றவை காரணமாக
இந்தச் சாதனை
சாத்தியமாகியுள்ளது.
போலியோவை ஒழிக்க 23 லட்சம்
தன்னார்வத் தொண்டர்களைக் கொண்ட குழுக்களும், 1,50,000 கண்காணிப்பாளர்களும் இரவு பகலாக நாட்டில்
உள்ள ஒவ்வொரு
குழந்தையையும் சென்றடைந்துள்ளனர் என்றார் குலாம் நபி
ஆஸாத்.
மேலும் போலியோ ஒழிப்பில்
அரசுடன் இணைந்து
பாடுபட்ட உலக
சுகாதார அமைப்பு,
யுனிசெஃப், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பெற்றோர்கள்
அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...