இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி
ஆசிரியர்களாகப் பதவி உயர்வு வழங்கி நிரப்பிய பிறகே புதிய பணியிடங்களுக்கு
ஆசிரியர்களை நியமனம் செய்திட வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப் பள்ளி
ஆசிரியர்கள் கூட்டணி வலியுறுத்தியது.
அமைப்பின் எருமப்பட்டி, திருச்செங்கோடு,
ராசிபுரம், புதுச்சத்திரம், நாமக்கல் ஆகிய 5 ஒன்றியக் கிளைகள் தொடக்க விழா
நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் வே.அண்ணாதுரை தலைமை
வகித்தார். மாவட்டச் செயலர் ஆர்.நடேசன் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர்
க.தனசேகரன், மாவட்ட துணைச் செயலர்கள் பெ.சரவணக்குமார், பி.கருப்பன்,
மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் சா.கண்ணன், மு.வெங்கடாசலம் உள்ளிட்டோர்
முன்னிலை வகித்தனர். அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி
பொதுச்செயலர் சு.ஈசுவரன் புதிய கிளைகளைத் தொடக்கிவைத்து
சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழ்ப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவியுயர்வு வழங்கிட வேண்டும், நடுநிலைப்
பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு உயர்நிலை, மேல்நிலைப்
பள்ளிகளில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியராகப் பதவியுயர்வு வழங்கிட வேண்டும்,
இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவியுயர்வு வழங்கி
நிரப்பிய பிறகே புதிய காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் நியமனம் செய்திட
வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.
மாநிலத் தலைவர் கே.காமராஜ், மாநிலப் பொருளாளர்
அ.ஜோசப் சேவியர், மாநில துணைத் தலைவர் வி.எஸ்.முத்துராமசாமி, மாவட்டப்
பொருளாளர் கு.சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...