விஏஓ தேர்விற்கு நிர்ணயிக்கப்பட்ட வயதுவரம்பைத்
தளர்த்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையம் சார்பில் வருவாய்த்துறையில் காலியாக உள்ள 2,342 கிராம நிர்வாக
அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இத்தேர்விற்கு 1.7.74க்குப் பின்பும், 1.7.93க்கு முன்பும் பிறந்தவர்கள்
விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற குரூப்4
தேர்விற்கு பிளஸ்2 மற்றும் அதற்கு மேல் கல்வித்தகுதி உள்ளவர்கள் 57 வயது
வரை உள்ளவர்கள் தேர்வு எழுதினர். ஒரே கல்வித்தகுதி கொண்ட தேர்வுகளில் வயது
வரம்பை வேறுபாடாக தேர்வாணையம் நிர்ணயித்துள்ளது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விஏஓ தேர்விற்கு
40வயது என வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 3, 4 ஆண்டுகளாகத்தான்
அதிகளவில் போட்டித் தேர்வுகளை மாணவர்கள் எழுதி வருகின்றனர். இந்நிலையில்
தற்போதைய நிர்ணய வயது வரம்பால் ஏராளமானோர் தேர்வு எழுத முடியாத நிலை
ஏற்படும்.
கடந்த 3 முறை விஏஓ தேர்வுகளில் வெற்றி
பெற்றவர்கள் குரூப்2, குரூப்1 பணிகளுக்குச் சென்று விட்டனர். இதனால்
ஏற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப 7வது, 8வது என்று பலகட்ட கலந்தாய்வு
நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே குரூப்4 தேர்வைப் போல விஏஓ
தேர்விற்கும் வயது வரம்பைத் தளர்த்த வேண்டும் என மாணவர்கள், பொதுமக்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...