10,11,12 Public Exam Preparation March-2024
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Monday 15 September 2014
2 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
பணிநீக்கம் செய்யப்பட்ட கணினி ஆசிரியர்களின் நிலை
ReplyDeleteதமிழக அரசின் இரு வேறு விதமான முடிவுகள் - இதனால் பாதிக்கப்பட்டவர்கள் : கணினி ஆசிரியர்கள்.
83-உயர் அதிகாரிகள் விசயத்தில் அரசின் நிலை;
2005 ஆம் ஆண்டு TNPSC-ஆல் துணை கலெக்டர், டி.எஸ்.பி, வணிக வரித்துறை போன்ற பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 83 நபர்களும் தமிழ்நாடு தேர்வாணையம் வகுத்த விதிமுறைகளை மீறியுள்ளனர் இதனால் அவர்களை பணியிலிருந்து நீக்கும் படி சென்னை உயர்நீதிமன்றம் 2011 மார்ச் 4ம் தேதி தீர்ப்பளித்தது. ஆனால் தமிக அரசு இந்த 83 நபர்களையும் பணிநீக்கம் செய்யாமல் இருந்து வந்தது.
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட 19 பேர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல் முறையீட்டின் தீர்ப்பில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து 83 நபர்களையும் உடனடியாக பணிநீக்கம் செய்யும் படி உத்தரவிட்டது.
தமிழக அரசு 83 நபர்களையும் பணிநீக்கம் செய்யமுடியாது என்று கூறு உச்சநீதீமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தது. இந்த மனு 27.08.2014 அன்று விசாரணைக்கு வந்தது. இதில் நீதியரசர்கள் அனில்தவே, தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் 83 நபர்களும் பணியில் தொடரலாம் என்று கூறி வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
652 கணினி ஆசிரியர்கள் விசயத்தில் அரசின் நிலை;
இதே சென்னை உயர் நீதிமன்றம் 2013 ஆகஸ்ட் மாதம் வழங்கிய தீர்ப்பில் 652 கணினி ஆசிரியர்களை பணியிலிருந்து நீக்க உத்தரவிட்டது. (காரணம் இவர்கள் TRB நடத்திய தேர்வில் 50% சதவீதத்திற்கு குறைவாக மதிப்பெண் எடுத்ததால்) உடனே தமிழக அரசு உடனடியாக 652 கணினி ஆசிரியர்களை பணிநீக்கம் செய்தது.
83 உயர் அதிகாரிகளை இதே நீதிமன்றம் பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டபோது அரசு இவர்களை பணிநீக்கம் செய்யவில்லை. 652 கணன ஆசிரியர்களை மட்டும் அரசு உயர்நீதிமன்றம் கூறிய உடனே பணிநீக்கம் செய்தது. இதிலும் இன்னொரு வேதனை 83 நபர்களையும் பணிநீக்கம் செய்யும் படி உச்சநீதிமன்றம் கூறியும் அரசு இவர்களை பணிநீக்கம் செய்யவில்லை. மாறாக அரசு 83 பேருக்காக வரிந்துகட்டிக்கொண்டு உச்சநீதிமன்றத்திலே மேல்முறையீடு செய்கிறது 83 அதிகாரிகளையும் பணிநீக்கம் செய்யமாட்டோம் என்று. அதற்கு உச்சநீதிமன்றமும் 83 நபர்களும் பணியில் தொடரலாம் என்று கூறியிருக்கின்றது.
அரசு 652 கணினி ஆசிரியர்களின் நிலையில் அரசு இவர்களை பணிநீக்கம் செய்ய மாட்டோம் என்று மேல் முறையீடு செய்யவில்லை. மேல்முறையீடு செய்யவில்லை என்றாலும் கூட சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதாடும் போதாவது அரசு தரப்பில் 652 கணினி ஆசிரியர்களையும் பணிநீக்கம் செய்யமாட்டோம் என்று கூறியிருந்தால் அன்றே 652 நபர்களும் காக்கப்பட்டிருப்பார்கள்.
652 கணினி ஆசிரியர் எந்த தவறும் செய்யவில்லை.
50% சதவீத மதிப்பெண்ணை 35% சதவீதமாக மாற்றி 652 கணினி ஆசிரியர்களையும் பணியமர்த்தியது தமிழக அரசுதான்.
TRB நடத்திய தேர்வில் 45 கேள்விகள் தவறாக கேட்டது TRB-யின் தவறு.
இதில் சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அரசின் நிறுவனமான சென்னை IIT-க்கு கேள்வி தாளை அனுப்பி எத்தனை கேள்விகள் தவறு என்று அறிக்கை கேட்டது. IIT-யின் அறிக்கையில் 20 கேளவிகள் முற்றிலும் தவறு 7 கேளவிகளுக்கு No Idea என்று பதில் அறிக்கை கொடுத்துது. ஆக நீதிமன்றம் மூலம் 20 கேள்விகள் தவறு என்று கூறியது. இதில் 150 வினாக்களில் 20 தவறான வினாக்களை கழித்து 130 வினாக்களுக்கு மட்டும் 50% மதிப்பெண் எடுத்தவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது TRB.
நீதிமன்றமும் 652 வாழ்கைகயில் விளையாடியது No Idea என்று IIT-கூறிய 7 வினாக்களை விட்டுவிட்டது. இதையும் சேர்த்தால் மொத்தம் 27 வினாக்கள் தவறானது.
இவ்வளவு குளறுபடி இதில் இருந்தது. இதில் 652 நபர்கள் பாதித்தனர்.
அரசு 83 அதிகாரிளை காப்பாற்றியது. ஆனால் 652 கணினி ஆசிரியர்களையும், அவரது குடும்பங்களையும் நடுத்தெருவில் குழிதோண்டி புதைத்துவிட்டது.
இந்த 652 கணினி ஆசிரியர்களுக்கும் உச்சநீதிமன்றம் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றது. ஆனால் தமிழக அரசு (சபிதா) இதை மறைத்து 652 கணினி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்க மறுக்கின்றது.
ReplyDeleteஉச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட குழு விசாரித்து இந்த முடிவை கொடுத்துள்ளனர். இதை நடைமுறைபடுத்த அவ்வளவு கடினமாக இருக்கின்றதா? நீதிமன்றத்தின் தீர்ப்பை அதிகாரிகளே மதிக்கவில்லை என்றால் நாடு எங்கே போகிறது என்று தெரியவில்லை.
எப்போதுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் முதல் உதவி செய்ய வேண்டும் இந்த கூற்று அனைவரும் அறிந்ததே. இதை தான் உச்சநீதிமன்மும் கூறியிருக்கின்றது. ஆனால் நம் கல்வித்துறைக்கு (சபிதா) தெரியவில்லை.