ரயில்வே
துறையில், 14 லட்சம் பேர் பணி புரிகின்றனர். இதில், குரூப் - சி, குரூப் டி பணிகளுக்கான ஊழியர்களை தேர்வு செய்யும் பணியை மேற்கொள்ள, சென்னை ரயில்வே
தேர்வு வாரியம் உட்பட நாடு முழுவதும், 21 வாரியங்கள் உள்ளன.
இதுவரை,
எழுத்தர், டிக்கெட் கலெக்டர், கமர்சியல் எழுத்தர், கணக்கு எழுத்தர்
உள்ளிட்ட குரூப் - சி பணிகளுக்கு, குறைந்தபட்ச கல்வித் தகுதி, 10ம் வகுப்பு
தேர்ச்சியாக இருந்தது. தற்போது, பிளஸ் 2 என, கல்வித் தகுதி
உயர்த்தப்பட்டுள்ளது.இதுகுறித்து, சென்னை ரயில்வே வாரிய அதிகாரி ஒருவர்
கூறியதாவது:
கல்வித் தகுதியை
உயர்த்தி, ரயில்வே வாரியத்திடம் இருந்து உத்தரவு வந்துள்ளது. இந்த
உத்தரவு, புதிய பணி நியமனங்களுக்கு பின்பற்றப்படும். கடந்த, டிசம்பர், 27ம்
தேதிக்கு முன் வெளியான குரூப் - சி பணி நியமன அறிவிப்புகளுக்கு, இந்த
உத்தரவு பொருந்தாது.இவ்வாறு, அவர் கூறினார்.