மாணவ, மாணவியருக்கு, இலவச லேப்-டாப் வழங்க, 5.50 லட்சம் 'லேப்-டாப்'கள்
கொள்முதல் செய்யும் பணி நடந்து வருகிறது.கடந்த, 2011 - 12ல், அரசு மற்றும்
அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும்கல்லூரிகளில், 8.67 லட்சம்
மாணவர்களுக்கு, இலவச, 'லேப்-டாப்'கள் வழங்கப்பட்டன.அடுத்து, 2012 - 13ல், 7.18 லட்சம்; 2013-14ல், 5.30 லட்சம் மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.
இதுவரை,
21.15 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். இத்திட்டத்திற்காக, 2,781.75
கோடி ரூபாய்செலவிடப்பட்டுள்ளது. நடப்பாண்டும், அடுத்த ஆண்டும், தலா 5.50
லட்சம், 'லேப்- டாப்'கள் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.நடப்பாண்டுக்கு,
1,100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, 5.50 லட்சம்,
'லேப்-டாப்'கள் கொள்முதல் செய்யும் பணி, எல்காட் நிறுவனத்திடம்
ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இத்திட்டப் பணி குறித்து, சிறப்பு திட்டங்கள்
செயலாக்கத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆய்வு செய்தார். அப்போது,
கொள்முதல் பணியை விரைவாகமுடித்து, விரைவாக மாணவர்களுக்கு, 'லேப்-டாப்'
வழங்க நடவடிக்கை எடுக்கும்படி,அதிகாரிகளுக்கு
உத்தரவிட்டார்.இக்கூட்டத்தில், தகவல் தொழில்நுட்ப செயலர் ராமச்சந்திரன்,
தொழில்நுட்ப கல்வி ஆணையர் பிரவீன்குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.