இப்போது இணைய தளத்திலும் செல்போனிலும் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு
வார்த்தையாக உள்ளது இந்த செல்பி மோகம். செல்பி க்கள் சமூக வலைத்தலங்களான
ஃபேஸ்புக், டுவிட்டர், கூகுள்+, இன்ஸ்ட்டாகிராம், டம்பிள்ளார் ஆகியவற்றில்
மிகப் பிரபலமாகவும் சிற்ப்பான வரவேற்பும் பெற்றுள்ளது.
செல்பி குறித்து கூகுல் நடத்திய ஆய்வில் சில சுவாரஷ்யமான தகவல்களை தெரிவித்துள்ளது.
மாணவ-மாணவிகள் ஒரு நாளைக்கு தங்களை தாங்களே 14 செல்பிகள் எடுப்பதாக கூகிள்
தெரிவித்துள்ளது. தங்கள் ஸ்மார்ட்போனில் ஒரு நாளைக்கு 11 மணி நேரம் அல்லது
அதற்கு மேல் செலவு செய்யும் இளைஞர்கள், சராசரியாக 14 செல்பிகள்
எடுப்பதாகவும், 25 முறை சமூக ஊடகங்களுக்கு செல்வதாகவும் கூகுள் மேற்கொண்ட
ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் 16 முறை புகைப்படம் அல்லது வீடியோ
எடுக்கிறார்கள்.செல்பி குறித்து கூகுல் நடத்திய ஆய்வில் சில சுவாரஷ்யமான தகவல்களை தெரிவித்துள்ளது.
அதேசமயம் இளைய வயதை கடந்தவர்கள் ஒரு நாளைக்கு 2.4 செல்பியும், 4 முறை புகைப்படம் அல்லது வீடியோ எடுக்கிறார்கள்.
இந்த செல்பி மோகம் இளைஞர்களை மட்டும் விட்டு வைக்கவில்லை உலகில் உள்ள அனைத்து பிரபலலங்களை இந்த செல்லி பாடாய் படுத்தி உள்ளது என்றே கூறலாம்.
இதில் எலன் டீஜெனரசின், 'ஆஸ்கார்' செல்பி, செவ்வாய் கிரகத்துடன், 'ரோவர்' விண்கலம் எடுத்த செல்பி, மாடல் அழகி, கிம் கர்தஷியானை, யானை தாக்கிய செல்பி ஆகியவை மிகவும் பிரபலமாக உள்ளன.
செல்பி எனப்படும் புகைப்படங்கள் 1800களில் இருந்தே உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த வார்த்தை மிகவும் பிரபலமடைந்தது சமூக வலைத்தலங்களினால் தான். முன்னதாக 2002-ல் முதன் முதலாக செல்பி எனும் சொல் ஒரு ஆஸ்திரேலிய இணையதளத்தில் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.