அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற கல்விக்குரலின் நல்வாழ்த்துக்கள்
பல்வேறு கோரிக்கைகளை
வலியுறுத்தி தமிழக ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பினர்
சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இந்த
போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய
திமுக
பொருளாளர் ஸ்டாலின்,
வரும் சட்டசபை
தேர்தலில் திமுக.,வை ஆட்சியில்
அமர்த்தினால் ஆசிரியர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். தொடக்க கல்வி முதல் மேல்நிலைக்
கல்வி வரை
தாய்மொழியான தமிழ் வழி கல்வி நடைமுறைப்படுத்தப்படும்.
பள்ளி கல்வி
துறையில் ஆசிரியர்
பணியில் சமூக
விரோதிகள் தலையீடு
அதிகமாக உள்ளது.
ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இந்த நிலை
மாற வேண்டும்
என தெரிவித்தார்.
ஆசிரியர்கள் முன் வைத்த அடிப்படைக் கோரிக்கைகளைக் கூட அ.தி.மு.க. அரசு நிறைவேற்றிக் கொடுக்கவில்லை என்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோவின் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் இன்று பங்கேற்று துவக்கி வைத்தேன். 15 அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து ஆசிரியர்கள் போராடி வருகிறார்கள். "அரசு ஊழியர்களுக்கு இணையாக ஆசிரியர்களுக்கு ஊதியம்", "புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது",
ஆசிரியர்கள் முன் வைத்த அடிப்படைக் கோரிக்கைகளைக் கூட அ.தி.மு.க. அரசு நிறைவேற்றிக் கொடுக்கவில்லை என்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோவின் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் இன்று பங்கேற்று துவக்கி வைத்தேன். 15 அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து ஆசிரியர்கள் போராடி வருகிறார்கள். "அரசு ஊழியர்களுக்கு இணையாக ஆசிரியர்களுக்கு ஊதியம்", "புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது",
"தொடக்கப் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வியை
கட்டாயமாக்குவது" உள்ளிட்ட அந்த
15 கோரிக்கைகளை ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இதற்காக
2013- ஆம் வருடத்திலிருந்து
அ.தி.மு.க. அரசிடம் பல்வேறு
கோரிக்கை மனுக்கள்
கொடுத்தும், போராடியும் வருகிறார்கள். ஆனால் இதுவரை
எந்த கோரிக்கையையும்
அ.தி.மு.க. அரசு நிறைவேற்றிக்
கொடுக்கவில்லை. உலகம் முழுவதும் உள்ள அரசுகள்
கற்றுக் கொடுப்பது
ஒரு புனிதமான
பணி என்று
கருதி ஆசிரியர்களை
மதித்து, அவர்களின்
கோரிக்கைகளை நிறைவேற்றித் தருகிற போது, இங்குள்ள
அ.தி.மு.க. அரசு மட்டும்
ஆசிரியர்களின் குறைந்தபட்சக் கோரிக்கைகளைக்
கூட நிறைவேற்றிக்
கொடுக்காதது மிகுந்த வருத்தமளிக்கிறது. இந்த ஆட்சியில்
ஆசிரியர்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை.
சாலைப் பணியாளர்கள்,
சத்துணவுப் பணியாளர்கள், மக்கள் நலப் பணியாளர்கள்,
மாற்றுத் திறனாளிகள்,
மாணவர்கள் மற்றும்
விவசாயிகள் என்று அனைத்துத் தரப்பினரின் கோரிக்கைகளையும்
இந்த அரசு
கண்டு கொள்ளவில்லை.
அனைத்து தரப்பினரும்
அ.தி.மு.க. அரசின் பாராமுகத்தால்
படு மோசமாக
பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதுதான் இன்றைய
நிலைமை. ஆசிரியர்கள்
உள்ளிட்ட அனைத்து
அரசு ஊழியர்களின்
கோரிக்கைகளும் திராவிட முன்னேற்றக் கழக அரசு
அமைந்தவுடன் நிச்சயம் நிறைவேற்றித் தரப்படும் என்று
இந்த தருணத்தில்
உறுதியளிக்க விரும்புகிறேன்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...