பத்தாம் வகுப்பு தமிழ் தேர்வின் முதல் நாளான, நேற்று வினாத்தாள் எளிமையாக
இருந்தது. ஆனால், 'ப்ளூ பிரின்ட்' படி கேட்க வேண்டிய திருக்குறள் கேள்வி
இடம் பெறவில்லை.தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு
நேற்று துவங்கியது. இதை, 10.72 லட்சம் பேர் எழுதினர். முதல் நாளான நேற்று,
வினாத்தாள் மிக எளிமை யாகவே இருந்தது. நன்றாக படிக்கும் திறனுள்ள
மாணவர்கள், 100 மதிப்பெண் பெற முடியும் என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
வினாத்தாளில்
மொத்தம், 100மதிப்பெண்களுக்கு, சாய்ஸ் அடிப்படையில், 49 வினாக்கள்இடம்
பெற்றன. வினாக்களை பொறுத்தவரை, எளிதாக விடையளிக்கும் வகையிலும்,
குறிப்பிட்ட நேரத்துக்கு, 30 நிமிடங்கள் முன் முடிக்கும் வகையிலும்
எளிமையாகவேஇருந்தன.
சில கேள்விகள், 'ப்ளூ பிரின்ட்'க்கு மாறாக
அமைந்திருந்தன.அதாவது, மனப்பாட பாட்டு பகுதியில், ஆறு மூன்று
மதிப்பெண்ணுக்கான வாழ்த்துப் பாடல், ஆறு மதிப்பெண்களுக்கு
கேட்கப்பட்டிருந்தது. அதனால், மாணவர்களுக்கு, மூன்று மதிப்பெண்கள் கூடுதலாக
கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. எட்டு மதிப்பெண்ணுக்கான
நெடுவினாவில், செய்யுளில் இரண்டு வினாக்களில், ஒன்று கண்டிப்பாக
திருக்குறள் கொடுக்கப்பட்டு, அதன் விளக்கத்தை மாணவர்கள் எழுத வேண்டும்.
ஆனால், நேற்றைய கேள்வித்தாளில் நெடுவினாவில், திருக்குறளே இடம்பெறவில்லை.
அதனால், மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். திருக்குறளுக்கு பதில், கம்ப
ராமாயணமும், சீறாப்புராணமும் இடம் பெற்றது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...