நம்மில் பலரிடமும் உள்ளது ஆனால்,பலருக்கும் இதன் முக்கியத்துவம் பற்றி
தெரிவதில்லை. பான் கார்டு பற்றியவிரிவான தகவல்களும் அதனுடைய
விளக்கங்க ளும் பற்றி பார்போம்.1. PAN CARD என்றால் என்ன?
Permanent Account Number என்பதின்சுருக்கமே.
2. அதன் முக்கியதுவம் என்ன?வங்கி கணக்கு தொடங்குவதற்கும்,மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குச்சந்தையில் முதிலீடு செய்வ தற்கும்அடிப்படைத் தேவை ஆகி விட்டது பான்எண். நிரந்தர கணக்கு அட்டை எனப்படும்
பான் கார்டு (PAN Card) எண் இல்லாமல்இனி ஒருவர் தான் பணிபுரியும்
நிறுவனத்தில் சம் பளம் கூட வாங்கமுடியாது என்ற நிலையும் உள்ளது.3. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?இந்திய குடிமகன்கள் அனைவருமே பான்கார்டுக்கு விண்ணப்பி க்க முடியும்.4. அதற்கு என்ன செலவாகும்?
இதற்காக ரூபாய் 94/- NRIகளுக்கு ரூபாய்744/-மட்டுமே செலவாகும். புரோ க்கர்
மூலமாக ரூபாய் 250/-முதல் செல வாகும்.5. PAN CARD – ன் அவசியம்:
1) ரூ.5 லட்சம் அதற்கு மேல் அசையாசொத்துகள் வாங்கும் போது அல்லது
விற்கும் போது அவசியம்.2) வாகனம் அல்லது மோட்டார்வாகனத்தின் கொள்முதல் அல்லதுவிற்பனையின் போது (இரு சக்கர வாகனம்
மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்டஊர்தி நீங்கலாக)3) ரூ.50,000/-க்குமேல் வங்கியில் FixedDeposit செய்யும்போது அவசிய ம்.4) அஞ்சலக சேமிப்பு வங்கி கணக்கி ல்வைக்கப்படும் Fixed Deposit ரூ.50,000தாண்டும் போது அவசிய ம்.
5) ஒப்பந்த மதிப்பு ரூ.1லட்சம் மிகும்போது செய்யப்படும் பிணை யங்களின்
கொள்முதல் அல்லது விற்பனையின் போதுஅவசியம்.6) வங்கி கணக்கு துவங்கும் போது.7) தொலைபேசி, செல்போன் இணைப்புபெற விண்ணப்பிக்கும் போது.8)தங்கும் விடுதி மற்றும் உணவு விடுதிக்கு செலுத்தும் கட்டணம் ரூ. 25,000/-மிகும் போது அவசியம்.9) ஒரு நாளில் வங்கியில் பெறப்படும் DD/Pay Order அல்லது வங்கி காசோலையின்
மொத்த தொகை ரூ.50,000/- க்கு அதிகமாக செலுத்தும் போது அவசி யம்.
10) வருமான வரி ரிட்டன தாக் கல் செய்யஅவசியம்.11)சேவை வரி மற்றும் வணிக வரிதுறையில் பதிவு சான்று பெற Pan Cardகட்டயமாகும்.
12) முன்பு, மியூச்சுவல் ஃபண்டில்ரூ.50,000 மற்றும் அதற்கும் அதிகமான
தொகையை முதலீடுசெய்யும் போதுதான்பான்கார்டு அவசிய மிருந்தது. ஆனால்,தற்போ து எவ்வளவு குறைந்த பணத்தைமுதலீடு செய்தாலும் பான்கார்டுஎண்ணை குறிப்பிட வேண் டும்.மேலும், மைனர்பெயரில் மியூச்சுவல்ஃபண்டில் முதலீடு செய்யும்போது, பான்கார்டு எண்ணை சமர்ப்பிக்க வேண்டு ம்.இதற்காக, தற்போது மைனர்களு க்கும்பான் கார்டு வழங்கப்படுகிறது.இதனால் அனைவரும் அவசர அவசரமாகபான்கார்டு பெறும் முயற்சியில்இறங்கியுள்ளனர். பான் கார்டு பெறுவதுஎன்பது கடினமான காரியமாகச் சிலர்நினை க்கின்றனர். சிலர் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, பான்கார்டு வாங்கித் தருவதாகக் கூறிகுறிப்பிட்ட தொகையைவிட அதிக மானகட்டணத்தை வசூலித்து கொள்ளை லாபம்அடித்தும் வரு கின்றனர்.“மத்திய அரசு 2007 ஜனவரி முதல்தேதிக்குப்பிறகு வருமான வரித்துறையில்தாக்கல் செய்யப்படும் அனைத்துரிட்டன்களுக் கும், மியூச்சுவல் ஃபண்டுமுதலீடுகளுக்கும் பான் கார்டு எண்ணைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கியுள்ளது.மேலும், இந்தக் கார்டை வாங்கி னால்அரசுக்கு ஆண்டுதோறும் வருமானவரிசெலுத்த வேண்டி யிருக்குமோ என்றஒருவித அச்சமும் மக்கள் மனதில் எழுந்துள்ளது. உண்மையில், பான் கார்டுவாங்குவதால் வருமான வரி கட்டவேண்டிய அவசியம் கிடையாது.அனைவரையும் வருமானவரம்புக்குள்கொண்டு வருவதற் காகவே இந்தபான்கார்டு கட்டா யமாக்கப்பட்டுள்ளது.
பான்கார்டு பெறுவதற்கான நடைமுறைகள் தற்போது மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது.பான்கார்டு பெற விரும்புவோர்:வருமான வரித்துறையின் Form 49-ஏ என்றபடிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.இந்த விண்ணப்பத்துடன் முகவரிக்கானசான் றிதழை இணைக்க வேண்டும்.இந்த விண்ணப்பப் படிவத்தைhttp://www.utitsl.co.in/pan(or)www.tin-nsdl.com(or)www.incometaxindia.gov.in ,ஆகிய இணையத்தளங்களின் டவுன்லோட்
செய்து கொள்ளலாம். மேலும் வருமானவரித்துறையின் ஐடி பான் சர்வீசஸ்
மையத்தி லும், டிஐஎன் மையங்களிலும்இதைப் பெறலாம்.அப்ளை செய்யப்பட்ட கார்டி-ன் Statusஅறியஇதற்கு கீழ்கண்ட அடையாளசான்றிதழ்களில் சில அவசியம்.விலாசம் தொடர்பாக கீழ்கண்ட
சான்றிதழ்களில் சிலவும் அவசியம்.
1. பள்ளி டிசி 1. மின் கட்டண ரசீது
2. பிளஸ் டூ சான்றிதழ் 2. தொலைபேசி
கட்டண ரசீது
3. கல்லூரி் சான்றிதழ் 3. வங்கிக் கணக்கு
விவரம்
4. வங்கிக் கணக்கு விவரம் 4. வீட்டு
வாடகை ரசீது
5. வாட்டர் பில் 5. பாஸ்போர்ட்
6. ரேசன் கார்டு 6. ரேசன் கார்டு
7. வீட்டு வரி ரசீது 7. வாக்காளர்
அடையாள அட்டை
8. பாஸ்போர்ட் 8. வீட்டு வரி ரசீது
9. வாக்காளர் அட்டை 9. ஓட்டுனர் உரிமம்
10. ஓட்டுனர் உரிமம் 10.பணியாற்றும்நிறுவனத்திடம் பெறும் கடிதம்
விண்ணப்பிப்பவர் 18 வயதுக்குக்குறைவான மைனராக இருந்தா ல், அவரது
பெற்றோர் அல்லது கார்டியனின்சான்றிதழ்களே போ துமா னவை.உங்களிடம் பான் கார்ட் இருந்து அதுகுறித்த மேலும் விவரங்களைப் பெற என்றஇணை யத்தளத்தை நாடலாம்.சிலருக்கு வருமான வரித்துறைதானாகவே இந்த அட்டையை வழங்கும்.ஒரு தனிப்பட்ட நபர் வரி செலுத்தினாரா,வரிப் பிடித்தம் நடந்ததா, அவரது வங்கிக்கணக்கில் நடந்த பரிமாற்றம் உள்ளிட்ட
விவர ங்களை வருமான வரித்துறை பெறபான்கார்ட் உதவுகிறது.
பான் கார்டில் உள்ள எண்- எழுத் துக்கள்ஒவ்வொன்றும் ஒரு குறி யீடாகும்.
அதைத் தெரிந்து கொள் வோம்.உதாரணத்துக்கு பான் கார்ட் எண்
ACHPL456B என்று வைத்துக் கொள்வோம்.முதல் 3 எழுத்துக்கள் வரிசை
எண்களாகும். 4வது எழுத்து தனிப் பட்டநபரின் கார்டா அல்லது ஒரு தொழில்
நிறுவனத்தின் கார்டாஎன்பதைகுறிக்கிறது.
C – Company
P – Person
H – HUF(Hindu Undivided Family)
F – Firm
A – Association of Persons (AOP)
T – AOP (Trust)
B – Body of Individuals (BOI)
L – Local Authority
J - Artificial Juridical Person
G – Government
5வது எழுத்து பான் அட்டைவைத்திருப்பவரின் கடைசி பெயரின் முதல்
எழுத்தாகும். அடுத்துவரும் எண்கள்வரிசை எண்களாகு ம். இது 0001ல்
ஆரம்பித்து 9999வரை செல்லும். கடைசிஎழுத்து ம் வரிசை எண்
தொடர்புடையதுதான்மத்திய வருமான வரித்துறை அலுவ லகம்
மூலம், 2003 ஜூலை முதல் தேதிக்குமுன்பு வரை விநியோகிக்க ப்பட்ட
பான்கார்டுகளை தற்போதும்பயன்படுத்தலாம். எனவே, புதிதாகவிண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை.கலர் ஃபோட்டோவுடன் கூடிய புதியலேமி னேட்கார்டை பெறவேண்டும் எனவிரும் பினால் மட்டும் புதிதாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறுபெறும்போது, ஏற்கனவே இருந்த எண்தான்ஒதுக்கப்படும். இதே போல், பான் கார்டுதொலைந்து போனாலோ அல்லதுஏதாவது சேதமுற்றா லோ கூடவிண்ணப்பித்து புதிய கார்டைப்பெற்றுக்கொள்ளலாம்.இனி வரும் காலங்களில் எத்தகையநடவடிக்கைகளுக்கும் பான் கார்டு என்பதுஅத்தியாவசியமான ஒன்றாகி விட்டது.எனவே, அதை இப்போதே வாங்கி வைத்துக்கொள்வது புத்திசாலித்தனம்,,
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...