இந்திய, 'பார்' கவுன்சில் மற்றும் மாநில பார் கவுன்சில் உறுப்பினர்களாக
உள்ள வழக்கறிஞர்களின் சான்றுகளை சரிபார்க்கும் விண்ணப்பத்தை பெறும்
காலத்தை, சுப்ரீம் கோர்ட் நீட்டித்துள்ளது. 'போலி வழக்கறிஞர்களை நீக்கும்
வகையில், அனைத்து மாநில பார் கவுன்சிலில் உள்ள வழக்கறிஞர்கள், மீண்டும்
பதிவு செய்வதற்கு விண்ணப்பம் அளிக்க வேண்டும்; கல்வி சான்றிதழ்களை
சமர்ப்பிக்க வேண்டும்' என, இந்திய பார் கவுன்சில் சட்டத்தில் திருத்தம்
செய்யப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில்
நடந்து வருகிறது.
இந்த வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது,
நீதிபதிகள், பினாகி சந்திர கோஷ், அஷோக் பூஷண் அமர்வு பிறப்பித்த உத்தரவு:
இந்திய பார் கவுன்சில் மற்றும் மாநில பார் கவுன்சில்கள்,
வழக்கறிஞர்களிடமிருந்து விண்ணப்பம் பெறும் காலம், நவம்பர், 30 வரை
நீட்டிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, கல்விச் சான்றிதழ்களின் உண்மை தன்மை
குறித்து, அந்தந்த பல்கலை, கல்லுாரிகள் மூலம் சரிபார்க்க வேண்டும். இந்தப்
பணியை, 2017, ஜனவரி, 31க்குள் முடிக்க வேண்டும். இந்த சான்றிதழ்
சரிபார்ப்புக்காக, பல்கலைகள், எந்த கட்டணத்தையும் வசூலிக்கக் கூடாது.
இதற்கிடையில், எந்த பார் கவுன்சிலுக்கும் தேர்தல் நடத்தக் கூடாது.
அனைத்துப் பணிகளும் முடிந்த பின், தேர்தலை எப்போது நடத்த வேண்டும் என்பதை,
சுப்ரீம் கோர்ட் நிர்ணயிக்கும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.4,000 போலி வழக்கறிஞர்கள் : வழக்கு விசாரணையின் போது, இந்திய பார் கவுன்சில் சார்பில் அதன் உறுப்பினர், எஸ்.பிரபாகரன் வாதிட்டதாவது: போலி வழக்கறிஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. தமிழகத்தில் மட்டும், 4,000 போலி வழக்கறிஞர்கள் உள்ளனர்.
அதனால், போலிகளை ஒழிக்கும் வகையில் நடக்கும்
சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடியும் வரை, பார் கவுன்சில்களுக்கு தேர்தல்
நடத்த அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அவர் வாதிட்டார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...