ஆதார் அட்டை இல்லாததால் உதவித்தொகைக்கு சிக்கல்.
ஆதார் அட்டை இல்லாததால் உதவித்தொகை பெற முடியாத நிலை மாணவர்களுக்கு
ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்கள், உதவித்தொகை பெற ஆதார் எண்
கட்டாயமாக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கும் ஆதார்
எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் வங்கி கணக்கில் உதவித்தொகை நேரடியாக செலுத்தப்படுவதால், வங்கியில் ஆதார் எண் சமர்பிக்க வேண்டியுள்ளது. பள்ளி மாணவர்களில் 20 சதவீதம் பேர் இன்னும் ஆதார் அட்டை பெறாத நிலையில் உள்ளனர்.இதனால் கல்வி உதவித்தொகை பெறுவதிலும் மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதுவரை ஆதார் அட்டை பெறாத மாணவர்கள் அருகில் உள்ள ஆதார் மையங்களில் விண்ணப்பிக்கலாம், என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.ஆனால், அங்கு கூட்டம் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனை தவிர்க்க அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் ஆதார் சிறப்பு முகாம் நடத்த வேண்டும், என பள்ளி நிர்வாகங்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் வங்கி கணக்கில் உதவித்தொகை நேரடியாக செலுத்தப்படுவதால், வங்கியில் ஆதார் எண் சமர்பிக்க வேண்டியுள்ளது. பள்ளி மாணவர்களில் 20 சதவீதம் பேர் இன்னும் ஆதார் அட்டை பெறாத நிலையில் உள்ளனர்.இதனால் கல்வி உதவித்தொகை பெறுவதிலும் மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதுவரை ஆதார் அட்டை பெறாத மாணவர்கள் அருகில் உள்ள ஆதார் மையங்களில் விண்ணப்பிக்கலாம், என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.ஆனால், அங்கு கூட்டம் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனை தவிர்க்க அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் ஆதார் சிறப்பு முகாம் நடத்த வேண்டும், என பள்ளி நிர்வாகங்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...