TET RELATED ARTICLE: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


TET RELATED ARTICLE:

TET ARTICLE :ஆசிரியர் தகுதித்தேர்வு - ஜெயலலிதாவுக்காக காத்திருந்த பள்ளி ஆசிரியர்கள்!
அஇஅதிமுக ஆட்சியில் கல்வித்துறையில் நடைபெற்ற நல்ல விஷயங்களில் ஒன்று ஆசிரியர் தகுதித்தேர்வு. ஜெயலலிதா ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டு பள்ளி ஆசிரியர் கனவில் இருந்தவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினார். மூன்று முறை ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பெற்று எழுபதாயிரம் பேருக்கு மேல் வேலை வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள்.ஆசிரியர் பட்டயப்படிப்பையும், பி.எட் படிப்பையும் முடித்து பல ஆண்டுகள் காத்திருந்தவர்களுக்கு இந்த தேர்வு ஒரு திருப்புமுனையினை ஏற்படுத்தியது. கடந்த மூன்று ஆண்டுகளாக நீதிமன்ற வழக்குகள் காரணமாக ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறாமல் இருந்தது.

கடந்த மாதம் அனைத்து வழக்குகளிலும் தமிழக அரசுக்கு சாதகமான முறையில் தீர்ப்பு கிடைத்திருக்கிறது. ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வந்தவுடன் ஆசிரியர் தகுதித்தேர்வை அறிவிக்கத் தயாராக இருந்தது பள்ளி கல்வி துறை.
எதிர்பாராத விதமாக ஜெயலலிதா மறைய இப்போது ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு காத்திருக்கும் ஆசிரியர்கள் இனி தகுதித்தேர்வு நடக்குமா, நடக்காதா என்று சோகத்தில் இருக்கிறார்கள். ஏற்கனவே நடைப்பெற்ற தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்ணாக 90 மதிப்பெண்ணை நிர்ணயித்தது அரசு. இந்த மதிப்பெண்ணை எட்டிப்பிடித்தவர்கள் 1% க்கும் மிக குறைவு. இந்த நிலையில் தேர்வு எழுதியவர்கள் தேர்ச்சி மதிப்பெண்ணை குறைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தார்கள். ஜெயலலிதா சட்டசபையில் தேர்ச்சி மதிப்பெண் 82 எடுத்து இருந்தால் தேர்ச்சி என்று அறிவித்தார். இதன் மூலம் 70,000 பேர் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலில் இடம்பிடித்தார்கள்.
தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின்னர் வேலையில் சேர தயாராக இருந்தார்கள். இந்தநிலையில் பள்ளி கல்வித்துறை வெயிட்டேஜ் முறையினை அறிவித்தது. இந்த அறிவிப்பு 35,000 பேர் வேலைக்கு சேர முடியாத நிலையினை ஏற்படுத்தி விட்டது. இவர்கள் நீதிமன்ற கதவை தட்டி பார்த்தார்கள். நீதிமன்றம் தமிழக அரசு எடுத்த முடிவு சரி.
இனி அரசு உங்களுக்கு வேலை வழங்குவது குறித்து முடிவெடுத்துக்கொள்ளலாம் என்று சொல்லி அனுப்பி விட்டது. பாதிக்கப்பட்டவர்கள் சென்ற மாதம் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜனிடம் முறையிட, அம்மா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியவுடன், இது குறித்து அவரிடம் தெரிவித்து நல்ல முடிவினை பெற்று தருவதாக சொல்லி இருக்கிறார்கள். அம்மா குணமடைந்து வந்தவுடன் ஆசிரியர் பணி கிடைத்து வாழ்வு மலரும் என்று காத்திருந்திருக்கிறார்கள். ஜெயலலிதா மறைவால் இப்போது சோகம் சூழ்ந்து மகிழ்ச்சி இழந்து இருக்கிறார்கள்.
Posted Date : 19:34 (09/12/2016) Last updated : 19:34 (09/12/2016)
ஜெயலலிதாவுக்காக காத்திருந்த பள்ளி ஆசிரியர்கள்! #TETexam
அஇஅதிமுக ஆட்சியில் கல்வித்துறையில் நடைபெற்ற நல்ல விஷயங்களில் ஒன்று ஆசிரியர் தகுதித்தேர்வு. ஜெயலலிதா ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டு பள்ளி ஆசிரியர் கனவில் இருந்தவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினார். மூன்று முறை ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பெற்று எழுபதாயிரம் பேருக்கு மேல் வேலை வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள்.
Advertisement
இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்
ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலுக்கு வருவதற்கு முன், போயஸ் கார்டனில் என்ன நடந்தது? #VikatanExclusive
ஆசிரியர் பட்டயப்படிப்பையும், பி.எட் படிப்பையும் முடித்து பல ஆண்டுகள் காத்திருந்தவர்களுக்கு இந்த தேர்வு ஒரு திருப்புமுனையினை ஏற்படுத்தியது. கடந்த மூன்று ஆண்டுகளாக நீதிமன்ற வழக்குகள் காரணமாக ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறாமல் இருந்தது. கடந்த மாதம் அனைத்து வழக்குகளிலும் தமிழக அரசுக்கு சாதகமான முறையில் தீர்ப்பு கிடைத்திருக்கிறது. ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வந்தவுடன் ஆசிரியர் தகுதித்தேர்வை அறிவிக்கத் தயாராக இருந்தது பள்ளி கல்வி துறை.
எதிர்பாராத விதமாக ஜெயலலிதா மறைய இப்போது ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு காத்திருக்கும் ஆசிரியர்கள் இனி தகுதித்தேர்வு நடக்குமா, நடக்காதா என்று சோகத்தில் இருக்கிறார்கள். ஏற்கனவே நடைப்பெற்ற தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்ணாக 90 மதிப்பெண்ணை நிர்ணயித்தது அரசு. இந்த மதிப்பெண்ணை எட்டிப்பிடித்தவர்கள் 1% க்கும் மிக குறைவு. இந்த நிலையில் தேர்வு எழுதியவர்கள் தேர்ச்சி மதிப்பெண்ணை குறைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தார்கள். ஜெயலலிதா சட்டசபையில் தேர்ச்சி மதிப்பெண் 82 எடுத்து இருந்தால் தேர்ச்சி என்று அறிவித்தார். இதன் மூலம் 70,000 பேர் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலில் இடம்பிடித்தார்கள்.
தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின்னர் வேலையில் சேர தயாராக இருந்தார்கள். இந்தநிலையில் பள்ளி கல்வித்துறை வெயிட்டேஜ் முறையினை அறிவித்தது. இந்த அறிவிப்பு 35,000 பேர் வேலைக்கு சேர முடியாத நிலையினை ஏற்படுத்தி விட்டது. இவர்கள் நீதிமன்ற கதவை தட்டி பார்த்தார்கள். நீதிமன்றம் தமிழக அரசு எடுத்த முடிவு சரி. இனி அரசு உங்களுக்கு வேலை வழங்குவது குறித்து முடிவெடுத்துக்கொள்ளலாம் என்று சொல்லி அனுப்பி விட்டது. பாதிக்கப்பட்டவர்கள் சென்ற மாதம் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜனிடம் முறையிட, அம்மா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியவுடன், இது குறித்து அவரிடம் தெரிவித்து நல்ல முடிவினை பெற்று தருவதாக சொல்லி இருக்கிறார்கள். அம்மா குணமடைந்து வந்தவுடன் ஆசிரியர் பணி கிடைத்து வாழ்வு மலரும் என்று காத்திருந்திருக்கிறார்கள். ஜெயலலிதா மறைவால் இப்போது சோகம் சூழ்ந்து மகிழ்ச்சி இழந்து இருக்கிறார்கள்.
Advertisement
"தகுதித்தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று வெற்றி இருக்கிறோம். சான்றிதழ் சரி பார்ப்பு முடிந்து வேலையில் சேரும் சேரத்தில் வெயிட்டேஜ் அறிமுகப்படுத்தினார்கள். இதனால் வேலைக்கு சேர முடியாமல் பெருமளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறோம். உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இது சார்ந்த முடிவெடுத்துக்கொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறது. முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியவுடன் இது குறித்து முடிவெடுத்து எங்களுக்கு நல்ல செய்தி வழங்குவார்கள் என்று காத்திருந்தோம். ஆனால், அவரது மறைவு எங்களை துயரத்தில் தள்ளி இருக்கிறது. இனி எங்களை யார் காப்பாற்றுவார்கள் என்று தெரியவில்லை. கல்வி அமைச்சர் தான் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும்" என்று வருத்தத்துடன் சொன்னார் ஆசிரியர் தகுதி தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களுக்கான சங்கத்தை சார்ந்த ஆசிரியர் ராஜபாண்டி.
"அம்மா 82 மதிப்பெண் பெற்றவர்களும் தேர்ச்சி பெற்றவர்களாக அறித்தார். இந்த அறிவிப்பு எங்களுக்கு பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நாங்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின்னர் வேலைக்கு செல்ல தயாராக இருந்தோம். இந்த நிலையில் வெயிட்டேஜ் முறை அறிவித்தது கல்வி துறை. இதன் மூலம் 27,000 பேர் வேலைக்கு சேர முடியாமல் போய் விட்டது. நாங்கள் பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி கல்வி முடித்து, கல்லூரி முடித்து தனியார் பள்ளியிலும், இதர பணியிலும் ஈடுப்பட்டு வருகிறோம். இந்த நிலையில் வெயிட்டேஜ் முறை கொண்டு வந்து எங்கள் வாழ்க்கையை டேமேஜ் ஆக்கி விட்டார்கள். எங்களது நிலை குறித்து கல்வி அமைச்சரிடம் முறையிட்டோம். அவர், அம்மா மருத்துவமனையில் இருக்கிறார்கள். அவர் நலமுடன் வீடு திரும்பியவுடன் உங்களது கோரிக்கையை தெரிவித்து நல்ல முடிவினை பெறுவதாக சொன்னார். அம்மாவின கருணையின் பார்வைக்காக காத்திருந்தோம். ஆனால், அம்மாவின் மரண செய்தி எங்களுக்கு விழுந்த இடியாக இருந்தது. இனி எங்களுக்கு கோரிக்கையினை யார் நிறைவேற்றுவார்கள்? என்று தெரியவில்லை. நல்ல முடிவெடுத்து எங்களது துயரத்தை போக்க வேண்டும்" என்கிறார் தமிழ்நாடு பி.எட். பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன்.
ஆசிரியர்கள் சோகமும் எதிர்ப்பார்ப்பும் கல்வி துறை கவனிக்கும் என்று நம்புவோம்.
-ஞா. சக்திவேல் முருகன்

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H