அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால் நாளை
(வெள்ளிக்கிழமை) முதல் தமிழ்நாட்டில் மழை பெய்யும் என்று வானிலை மைய
இயக்குனர் ஸ்டெல்லா தெரிவித்தார். பனி பெய்கிறது
அதிகாலையிலும் குளிர் அதிகமாக இருப்பதால் சென்னை
புறநகர் பகுதிகளில் மக்கள் தீ மூட்டி குளிர் காய்கிறார்கள். இந்த நிலையில்
தாய்லாந்து அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது என்று
வானிலை மையம் அறிவித்த, மக்களுக்கு சற்று ஆறுதலாக உள்ளது. வானிலை நிலவரம்
குறித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர்
ஸ்டெல்லா கூறியதாவது;- தாய்லாந்து அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை
நேற்று முன்தினம் உருவானது. அது மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. அது
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக அந்தமான் அருகே உள்ளது.
நாளை முதல் மழை பெய்யும்
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுப்பெற வாய்ப்பில்லை. இருப்பினும்
தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் மழை பெய்யும். நாளை தமிழ்நாட்டில்
தென்கடலோர பகுதியில் பெய்யும். அதைத்தொடர்ந்து 21 மற்றும் 22 தேதிகளில்
தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்யும். அதற்கு பின்னர் மழை பெய்வது
குறித்து இப்போதைக்கு எதுவும் கூறக்கூடாது. இருந்தாலும் தமிழகத்தில்
19-ந்தேதி வறண்ட வானிலைதான் நிலவும். இவ்வாறு ஸ்டெல்லா தெரிவித்தார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...