'நீட்' குறித்த வதந்தி :மாணவர்கள் குழப்பம்
எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புகளுக்கான, 'நீட்'
தேர்வு குறித்த அதிகாரப்பூர்வஅறிவிப்பு வெளியாகாத நிலையில், வதந்திகள்
பரவுவதால், மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புகளில் சேர, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு அறிவித்தது.
தமிழகம் உட்பட, சில மாநிலங்களில் மட்டும், மாநில அரசின் ஒதுக்கீட்டு இடங்களுக்கு, கடந்த ஆண்டு, 'நீட்' தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், தனியார் கல்லுாரிகள், பல்கலைகளில், 'நீட்' தேர்வின்படியே, மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.
எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புகளில் சேர, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு அறிவித்தது.
தமிழகம் உட்பட, சில மாநிலங்களில் மட்டும், மாநில அரசின் ஒதுக்கீட்டு இடங்களுக்கு, கடந்த ஆண்டு, 'நீட்' தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், தனியார் கல்லுாரிகள், பல்கலைகளில், 'நீட்' தேர்வின்படியே, மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.
இந்த ஆண்டு, 'நீட்'
தேர்வில் இருந்து விலக்கு உண்டா என்பது பற்றி, இன்னும் அதிகாரப்பூர்வமாக
அறிவிப்பு வெளியாகவில்லை. எனவே, மருத்துவப் படிப்பில் சேர உள்ள மாணவர்கள்,
'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய நிலையில் உள்ளனர்.அதே நேரம், 'நீட்'
தேர்வு தேதியும், விண்ணப்ப பதிவுக்கான தேதியும், இன்னும்
அறிவிக்கப்படவில்லை. ஆனால், 'நீட்' தேர்வு குறித்து, பல்வேறு தகவல்கள்
வதந்தியாக பரவுகின்றன. இது, மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை
ஏற்படுத்தியுள்ளது. 'அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், தவறான
தகவல்களை நம்ப வேண்டாம்' என, சி.பி.எஸ்.இ., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...