பள்ளி, கல்லூரிகள் இன்று இயங்கும்
'ஜல்லிக்கட்டுக்கான தடை விலகியதால், பள்ளிகள், கல்லுாரிகள் இன்று இயங்கும்; பள்ளி வாகனங்களும் இயங்கும்' என, அறிவிக்கப்பட்டுஉள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் காரணமாக, ஜன., 20ல், பள்ளிகள், கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது; தனியார் பள்ளிகளும் விடுமுறை அறிவித்தன.
இந்நிலையில், இன்று அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி கள் இயங்கும் என, பள்ளி கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் காரணமாக, ஜன., 20ல், பள்ளிகள், கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது; தனியார் பள்ளிகளும் விடுமுறை அறிவித்தன.
இந்நிலையில், இன்று அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி கள் இயங்கும் என, பள்ளி கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு தலைவர் மார்டின் கென்னடி மற்றும் தமிழ்நாடு
தனியார் நர்சரி, பிரைமரி மெட்ரிக் பள்ளிகள் சங்க பொதுச்செயலர்,
நந்தக்குமார் கூறுகையில், 'பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு தேர்வுகளுக்கு
குறைந்த நாட்களே உள்ளன. எனவே, தனியார் பள்ளிகள், இன்று முதல் வழக்கம் போல
இயங்கும்' என்றனர்.தமிழ்நாடு தனியார் பள்ளி வாகன கூட்டமைப்பு நல சங்க
தலைவர், வி.வைரசேகர் கூறுகையில், ''அனைத்து பள்ளிகளும், இன்று வழக்கம் போல
இயங்க உள்ளன. அதனால், எங்கள் வாகனங்கள் வழக்கம் போல, மாணவர்களை,
பள்ளிகளுக்கு அழைத்து செல்லும்,''என்றார்.கல்லுாரிகளும் இன்று மீண்டும்
திறக்கப்படுகின்றன.
கல்லுாரி கல்வி இயக்குனர் மஞ்சுளா கூறுகையில்,
''ஆண்டுக்கு, 180 நாட்கள் கல்லுாரிகள் இயங்க வேண்டும்.அந்த வகையில், இன்று
அந்தந்த பகுதி நிலைமைக்கு ஏற்ப, கல்லுாரிகள் இயங்கும். கல்லுாரி
முதல்வர்களே, இது தொடர்பாக முடிவு செய்து கொள்ள
உத்தரவிடப்பட்டுள்ளது,''என்றார்.அரசு பள்ளிகளைப் பொறுத்தவரை, ஜல்லிக்கட்டு
பிரச்னைக்காக, விடுமுறையே அறிவிக்கவில்லை. எனவே, வழக்கம் போல பள்ளிகள்
இயங்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...