அரசாணையை ஏற்று பத்திரப்பதிவு தடை உத்தரவை தளர்த்தியது உயர்நீதிமன்றம்
பதிவு: மே 12, 2017 19:43
விளைநிலங்களை அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளாக மாற்றி பத்திரப்பதிவு
செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் யானை
ராஜேந்திரன் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த
நீதிபதிகள் அங்கீகாரம் இல்லாத மனைகளை பத்திரப் பதிவு செய்யக்கூடாது என்று
தடை விதித்து உத்தரவிட்டனர்.
மேலும், அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை வரைமுறை படுத்துவது தொடர்பாக தமிழக அரசு புதிய விதிகளை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டது. அதன்படி, அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை வரைமுறைப்படுத்துவது தொடர்பாக அரசு புதிய விதிகளை வெளியிட்டு, அது ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இவ்வழக்கு இன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திர பதிவு செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை தளர்த்தி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
‘அரசாணைகளின்படி பத்திரப்பதிவை மேற்கொள்ளலாம். மனைகளை வரன்முறைப்படுத்துவது தொடர்பான புதிய விதிகளின் கீழ் பத்திரப்பதிவு செய்யலாம். ஏற்கனவே வீட்டு மனைகளாக பதிவு செய்யப்பட்ட நிலங்களை மறுபதிவு செய்யலாம் என்ற சட்டத்தின்கீழும் பத்திரப்பதிவு செய்யலாம். இறுதி தீர்ப்பு வரும்வரை பத்திரப்பதிவுகள் அனைத்தும் நீதிமன்றத்திற்குட்பட்டவை’ என்று கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூன் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மேலும், அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை வரைமுறை படுத்துவது தொடர்பாக தமிழக அரசு புதிய விதிகளை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டது. அதன்படி, அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை வரைமுறைப்படுத்துவது தொடர்பாக அரசு புதிய விதிகளை வெளியிட்டு, அது ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இவ்வழக்கு இன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திர பதிவு செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை தளர்த்தி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
‘அரசாணைகளின்படி பத்திரப்பதிவை மேற்கொள்ளலாம். மனைகளை வரன்முறைப்படுத்துவது தொடர்பான புதிய விதிகளின் கீழ் பத்திரப்பதிவு செய்யலாம். ஏற்கனவே வீட்டு மனைகளாக பதிவு செய்யப்பட்ட நிலங்களை மறுபதிவு செய்யலாம் என்ற சட்டத்தின்கீழும் பத்திரப்பதிவு செய்யலாம். இறுதி தீர்ப்பு வரும்வரை பத்திரப்பதிவுகள் அனைத்தும் நீதிமன்றத்திற்குட்பட்டவை’ என்று கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூன் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...