இந்நிலையில், போராட்டம் நடத்தாமல், அரசுக்கு ஆதரவாக செயல்பட்ட, ஜாக்டோ - ஜியோ கிராப் கூட்டமைப்பினர், சென்னையில் கூடி ஆலோசனை நடத்தினர். நவ., ௩௦ வரை காத்திருக்க, அச்சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். 'நவ., இறுதிக்குள், சம்பள உயர்வு குறித்த அறிவிப்பும், பங்களிப்பு ஓய்வூதிய திட்ட ஆய்வறிக்கையும் வராவிட்டால், போராட்டம் நடத்தலாம்' என, முடிவு செய்துள்ளனர்.
இந்த கூட்டத்தில், ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர், இளங்கோவன், தலைமை செயலக ஊழியர் சங்க தலைவர், கணேசன், அரசு ஊழியர் சங்க நிர்வாகி,
சண்முகராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.