
உடுப்பி மாவட்டத்தில் கிராஸ்லேண்ட் கல்லூரி மாணவ மாணவிகள் கண்காணிப்பாளர் இல்லாமல் தேர்வு எழுதினர்.
தேர்வு அறையில் மேற்பார்வையாளர் இருந்தாலே காப்பியடிப்பதில் வல்லவர்களான மாணவர்கள் இருக்கும் வேளையில் மேற்பார்வையாளரே வேண்டாம் நாங்கள் நேர்மையாக தேர்வு எழுதுவோம் என்று உடுப்பி மாவட்டத்தின் பிரமாவரில் தி கிராஸ்லேண்ட் கல்லூரி மாணவர்கள் தேர்வு எழுதி அசத்தியுள்ளனர்.பி.ஏ., பி.காம் தேர்வு எழுதிய 19 மாணவர்கள் இந்த முயற்சியைக் கோரிக்கையாக வைத்து அதற்கு கல்லூரி நிர்வாகவும் சம்மதித்து தேர்வு எழுதியுள்ளனர்.
இதற்குச் சம்மதம் தெரிவிக்கப்பட்டு தேர்வும் எழுதப்பட்டதையடுத்து இதே நடைமுறையில் பல மாணவ மாணவிகளும் இணைய ஆர்வம் காட்டியுள்ளதாக முதல்வர் சாமுவேல் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.