உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு இந்திய விண்வெளி ஆய்வு நிலையத்தில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் அரசுப்பள்ளி மாணவியின் கட்டுரை மாநில அளவில் முதலிடம் பெற்றது .இப்போட்டியில் பல்வேறு பள்ளிகளிலிருந்து எழுநூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களின் படைப்புகளில் நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் ஒன்றியத்திற்குட்பட்ட குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை இ.ஹரித்தாவின் கட்டுரை மாநில அளவில் முதலிடம் பெற்றது.
அம்மாணவியை பாராட்டி இஸ்ரோ இயக்குனர் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பரிசுகளை வழங்கினர்.இப்பரிசளிப்பு விழாவில் அம்மாணவியுடன் அப்பள்ளி தலைமையாசிரியரும் உடனிருந்தார்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...