தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும்குரூப் 2 தேர்வுகளுக்கு
கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களையும் அனுமதிக்கக் கோரிய மனுவுக்கு
பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கும், அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கும்
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சார் பதிவாளர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட குருப் 2 பதவிகளுக்கான தேர்வுக்கு
விண்ணப்பங்களை வரவேற்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
(டிஎன்பிஎஸ்சி) கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டது. அதில்,
பட்டப்படிப்பு முடித்தவர்கள் மட்டுமே தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும்
என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை எதிர்த்து, சென்னை சூளைமேட்டை சேர்ந்த
இளையபெருமாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர்
மனுவில், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்
தேர்வுகளுக்கும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குருப்1
தேர்வுகளுக்கும் இறுதி ஆண்டு பட்டப்படிப்பு மாணவர்கள்
அனுமதிக்கப்படுகின்றனர்.இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்ட குரூப் 2 தேர்வுக்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் மட்டுமே பங்குபெறமுடியும் என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இந்த ஆணை விதிகளுக்கு முரணானது. எனவே, இந்த அறிவிப்பாணை யை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இறுதி ஆண்டு பட்டப்படிப்பு மாணவர்களும் குருப் 2 தேர்வில் விண்ணப்பிக்க அனுமதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு 23ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி தமிழ்நாடு பணியாளர் மற்றும் நிர்வாக துறை செயலாளர் மற்றும் டிஎன்பிஎஸ்சி செயலாளருக்கு உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...