பகுதி நேர பி.இ. படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை அண்ணா
பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நவம்பர் 30 கடைசி
நாளாகும்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரி மற்றும்
குரோம்பேட்டை எம்.ஐ.டி.யில் இந்த பகுதி நேர பி.இ. படிப்புகள்
வழங்கப்படுகின்றன.
ஏற்கெனவே பணியில் உள்ளவர்கள் பயன்பெறும் வகையில் இயந்திரவியல், கட்டடவியல்,
மின்னணுவியல் பொறியியல், மின்னணுவியல் தொடர்பியல் பொறியியல், மின்னணுவியல்
உபகரணப் பொறியியல் ஆகியப் பிரிவுகளின் இந்த பகுதி நேரப் படிப்புகள்
வழங்கப்படுகின்றன.
இந்தப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் டிப்ளமோ முடித்திருப்பதுடன்,
குறிப்பிட்ட கல்லூரிகளிலிருந்து 120 கி.மீ. தொலைவில் பணிபுரிபவராக இருக்க
வேண்டும்.
வகுப்புகள் தினமும் மாலை 6.15 மணிக்குத் தொடங்கி இரவு 9.15 மணி வரை
நடத்தப்படும். இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் www.annauniv.edu
என்ற பல்கலைக்கழக இணையதளம் மூலம் ஆன்-லைனில் பதிவு செய்ய நவம்பர் 30 -ஆம்
தேதி கடைசி நாளாகும்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...