பாடநூல்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டதன் மூலம் அவற்றைப் பயன்படுத்துவதில் ஏற்படும் இடர்ப்பாடுகள் களையப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநர்
க.அறிவொளி வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழகத்தில் புதிய
பாடத்திட்டத்தின் அடிப்படையில் முதல் கட்டமாக 1, 6, 9 மற்றும் பிளஸ் 1
வகுப்புகளுக்குப் பாடநூல்கள் அனைத்து மாவட்டங்களிலும் எந்தவித சுணக்கமும்
இல்லாமல் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.அச்சிடப்பட்ட பாடநூல்கள் தவிர, மாணவர்கள் அவர்களின் வசதிக்கேற்ப
பாடநூல்களைப் படிப்பதற்கு ஏதுவாக அவை www.tnscert.org என்ற இணையதளத்திலும்
வெளியிடப்பட்டுள்ளன. இதனால் ஆசிரியர்களும் மாணவர்களும் பாடநூலைப்
பயன்படுத்துவதில் ஏற்படும் இடர்ப்பாடுகள் களையப்பட்டுள்ளன