
சென்னையைச் சேர்ந்த ஆறுமுகம்- கலைச்செல்வி தம்பதியரின் மகள் மதுமிதா (வயது 11). அரசு மருத்துவமனையில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். மதுமிதா பிறந்ததில் இருந்து, அவரது எதிர்காலத்தை நினைத்து பெற்றோர் வருத்தப்படாத நாளே இல்லை.
பிறக்கும்போதே மதுமிதாவுக்கு இதயநோய் பாதிப்பு இருந்தது. அப்போது பரிசோதனை செய்த மருத்துவர்கள், உடனடியாக சிகிச்சை அளிக்கத் தேவையில்லை என்றும், குழந்தை சற்று வளர்ந்த பிறகு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர். ஆனால், குழந்தை வளரத் தொடங்கியபோது, போதிய பணம் இல்லாததால், மருத்துவமனையில் சேர்ப்பதில் தாமதம் ஏற்பட்டது. அதேசமயம், மதுமிதாவின் உடல் நிலையும் பலவீனம் அடைந்தது. இதன் காரணமாக அறுவை சிகிச்சையை தொடர்ந்து தள்ளிப்போட்டனர். இப்படியே பல ஆண்டுகள் கடந்து விட்டன.

அறுவை சிகிச்சை மூலம் மதுமிதாவை குணப்படுத்த முடியும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அறுவை சிகிச்சை மற்றும் மருந்து செலவுகளுக்கு ரூ.2.5 லட்சம் செலவாகும் என்றும் கூறியுள்ளனர். ஆனால், மீன்பிடி தொழில் செய்து குறைந்த வருமானம் பெறும் ஆறுமுகம், இந்த தொகையை திரட்ட முடியாமல் தவிக்கிறார்.
இதனால், தன் செல்ல மகளின் உயிரைக் காப்பாற்றுவதற்காக நன்கொடையாளர்களின் உதவியை நாடியுள்ளார். நீங்கள் செய்யும் ஒவ்வொரு ரூபாய் நன்கொடையும், இதய நோயுடன் போராடிக்கொண்டிருக்கும் மதுமிதாவின் மறுவாழ்விற்கு உதவியாக இருக்கும்.

எதுதர்மா (அறக்கட்டளை பதிவு எண்) 12 A: 1419(32)80-91 மற்றும் 80- G-1419(32)/CIT-1/CBE/08-09
எதுதர்மா,
ரத்னம் டெக்சோன்,
பொள்ளாச்சி மெயின் ரோடு,
ஈச்சனாரி,
கோயம்பத்தூர்,
தமிழ்நாடு- 641021
+919600111639








