*🔶🔶போலீஸ் கான்ஸ்டபிள்கள், ஜெயில் வார்டன்கள், தீயணைப்பு துறை வீரர்கள் உள்ளிட்ட பணிகளுக்கு குறைந்தபட்ச, அதிகபட்ச கல்வி தகுதியை நிர்ணயிக்க வேண்டும் என உள்துறை செயலாளர், டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது."*
*🔶🔶கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தமிழ்நாடு சிறப்பு படை பிரிவில் ஆய்வாளராக பணியாற்றிய முத்து என்பவர், எந்தக் காரணமும் கூறாமல் 21 நாட்களுக்கு மேல் பணிக்கு வராமல் இருந்துள்ளார். இதனையடுத்து முத்து பணியை துறந்ததாக அறிவித்து 60 நாட்களுக்குள் ஆயுதப்படை டிஐஜி முன் ஆஜராகி விளக்கமளிக்க கிருஷ்ணகிரி கமாண்டண்ட் உத்தரவிட்டார்.*
*🔶🔶இந்த உத்தரவை எதிர்த்து முத்து தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், குறிப்பிட்ட 60 நாட்களுக்குள் டிஐஜி முன் ஆஜராகி விளக்கமளிக்காத முத்து, சென்னைக்கு வந்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் மனுவில் கையெழுத்திட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். இது முத்துவின் ஒழுங்கின்மையை காட்டுவதாக கூறி முத்துவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் சமீபகாலமாக காவல்துறையில் ஒழுங்கின்மை அதிகரித்து வருவதாகவும், காவலர்கள் பணிநேரத்தில் ஸ்மார்ட் போன்களில் விளையாடுவது, சினிமா பார்ப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் குறிப்பிட்டு, அதை கட்டுப்படுத்த வேண்டுமென அறிவுறுத்தினார்."*
*🔶🔶பணிக்கு தேவையான கல்வி தகுதிக்கு அதிகமாக படித்தவர்களை நியமிப்பதால்தான் இந்த ஒழுங்கின்மை அதிகரிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.*
*🔶🔶உயர்நீதிமன்ற துப்புரவு பணியாளர், அலுவலக உதவியாளர் பணிக்கு முதுநிலை படிப்பு முடித்தவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்கள் பணியை அக்கரையின்றி செய்வதாகவும் நீதிபதி வேதனை தெரிவித்தார்.*
*🔶🔶போலீஸ் கான்ஸ்டபிள்கள், ஜெயில் வார்டன்கள், தீயணைப்பு துறை வீரர்கள் போன்ற பணிகளுக்கு தேவையான கல்வி தகுதியையும், அதிகபட்ச கல்விதகுதியையும் நிர்ணயித்து 8 வாரத்தில் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென தமிழக உள்துறை செயலாளருக்கும், டிஜிபி-க்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம், பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி தேவையுள்ள பணிகளுக்கு தொழிற்கல்வி படித்தவர்கள் போட்டியிடுவதை தவிர்க்க முடியும் என நீதிபதி குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற கடைநிலை பணிக்கு முதுநிலை படித்தவர்களையும், தொழிற்கல்வி படித்தவர்களையும் அனுமதிப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என நீதிபதி தெரிவித்தார்.*
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...