நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தற்காலிக விடை கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர்
சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு மே 5ம் தேதி 155
நகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் நடந்தது. பானி புயல் காரணமாக ஒடிசாவில்
மே 20ம் தேதி இத்தேர்வு நடந்தது. மொத்தம் 15 லட்சத்து 19 ஆயிரத்து 375 பேர்
தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இந்தநிலையில், நீட் தற்காலிக விடை
கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, www.ntaneet.nic.in
என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்களின் விண்ணப்ப எண், பாஸ்வேர்ட் அளித்து
உள்ளீடு செய்ய வேண்டும்.
அதில், ''அப்ளை பார் கீ சேலஞ்'' என்ற லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும்.
அதில் நீட் தேர்வில் இடம்பெற்றிருந்த 180 கேள்விகள், அவற்றின் சரியான விடையாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆப்சன்கள் இடம்பெற்றிருக்கும். தற்காலிக விடை கையேட்டில் தவறு இருப்பதாக கருதும் மாணவர்கள், அந்த கேள்விகளை தேர்வு செய்து அவற்றுக்கான சரியான விடையாக கருதும் ஆப்சனை தேர்வு பைனல் சப்மிட் என்ற பட்டனை அழுத்த வேண்டும். தவறான விடை இருப்பதாக கருதி மாணவர்கள் தேர்வு செய்யும் ஒவ்வொரு கேள்விக்கும் தலா ₹1,000 கட்டணம் செலுத்த வேண்டும். மாணவர்கள் குறிப்பிட்ட விடை சரியானதாக இருக்கும்பட்சத்தில், மாணவர்கள் செலுத்திய கட்டணம் திரும்ப அளிக்கப்படும். ''அப்ளை பார் கீ சேலஞ்சுக்கு'' இன்று இரவு 11.50 மணிக்குள் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...