பின்னர் அவர் அளித்த பேட்டி:
தமிழ்நாட்டில் பள்ளிகளில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லை என்ற தவறான தகவலை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிடுகிறார். கடும் கோடை காரணமாக, ஒருவாரம் கழித்து பள்ளிகளை திறக்க கேட்டுக்கொண்டோம்.
ஓய்வுபெறும் நாளில், அரசு ஊழியர் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானது.
போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு சம்பளப் பிடித்தம், ஊதிய உயர்வு ரத்து, பணி உயர்வு ரத்து உள்ளிட்ட பல்வேறு பழிவாங்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.
தமிழக அரசு நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், விரைவில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்








