தமிழகத்தில், 2019 மே, 7ல் அக் ஷய திருதியை வந்தது அன்று, ஒரு கிராம் தங்கம், 3,022 ரூபாய்க்கும், சவரன், 24 ஆயிரத்து, 176 ரூபாய்க்கும் விற்பனையானது!
தற்போது, ஊரடங்கால், அனைத்து நகை கடைகளும் மூடப்பட்டுள்ளன. நேற்றைய நிலவரப்படி, 1 கிராம் தங்கம், 4,529 ரூபாயாகவும்; சவரன், 36 ஆயிரத்து, 232 ரூபாயாகவும் உள்ளது. ஓராண்டில் மட்டும், கிராமுக்கு, 1,507 ரூபாயும்; சவரனுக்கு, 12 ஆயிரத்து, 56 ரூபாயும் அதிகரித்துள்ளது. இன்று, அக் ஷய திருதியை கொண்டாடப்படுகிறது. தங்க சந்தைகளுக்கு, இன்று விடுமுறை. இதனால், நேற்றைய விலையே, இன்றும் நீடிக்கும்.
தங்க நகை விற்பனையில் ஈடுபட்டுள்ள பல நிறுவனங்கள், தங்களின் இணையதளம் வாயிலாக, தங்கம் விற்பனை செய்கின்றன. அந்நிறுவனங்கள், வாடிக்கையாளர்களை கவரும் வகையில், இணையதள விற்பனையிலும், வழக்கம் போல், 'தள்ளுபடி, தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் இலவசம்' என, பல சலுகை களை அறிவித்துள்ளன.