சென்னை:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம்
அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் எழுத்து, நேர்முகத் தேர்வு
அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகளில் முறைகேடு புகார்
எழுந்தது. இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி
முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்கள், இடைத்தரர்களை கைது செய்தனர்.
இதையடுத்து இனி நடைபெற உள்ள அனைத்து தேர்வுகளும் புதிய சீர்திருத்தங்களுடன்
சிறப்பாக நடத்தப்படும் என்றும், தேர்வர்கள் அச்சம் அடைய தேவையில்லை
என்றும் டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில்
தேர்வர்கள் தங்களுடைய குறைகள் மற்றும் புகார்களை நேரடியாக தங்களிடம்
தெரிவிக்கும் வகையில் செல்போன் செயலி ஒன்றை உருவாக்க டி.என்.பி.எஸ்.சி.
நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.
இதற்கான டெண்டர் அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. நேற்று வெளியிட்டு
இருக்கிறது. அதில் ‘தேர்வர்கள் குறைகள், புகார்களை தேர்வாணையத்துக்கு
தெரிவிக்க அனைத்து வகை செல்போன்களிலும் பதிவிறக்கம் செய்யும் வகையில்
செல்போன் செயலியை உருவாக்க தகுதியுடைய நிறுவனங்கள் அடுத்த மாதம் (ஜூன்)
22-ந்தேதிக்குள் ஒப்பந்த புள்ளிகளை சமர்ப்பிக்கலாம்’ என்று தெரிவித்து
இருக்கிறது. அதற்கான விதிமுறைகள், நிபந்தனைகள் தேர்வாணையத்தின்
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...