கொரோனா வைரஸூக்கு எதிராக போராடும் போராளிகளுக்காக இசைஞானி இளையராஜா பாடல் ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரபலங்கள் பலரும்
கருத்துக் கூறி வருகின்றனர். கொரோனா விழிப்புணர்வு பாடலாக இளையராஜா மற்றும்
ஏஆர் ரஹ்மான் இசையமைத்த பாடல்களின் மெட்டிலேயே பல பாடல்கள் வெளி
வந்துள்ளன. அண்மையில் கூட வைரமுத்து வரிகளில் எஸ்பி பாலசுப்பிரமணியம்
ஒருவன் ஒருவன் முதலாளி பாடல் மெட்டில் பாடியிருந்தார். அந்தப் பாடல் பெரும்
வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இசைஞானி இளையராஜா கொரோனாவை எதிர்த்து போராடும் போராளிகளுக்கு
மரியாதை செலுத்தும் வகையில் ஒரு பாடலை எழுதி இசையமைத்துள்ளார். அந்தப்
பாடலை பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். பாரத
பூமி.. ஒரு புண்ணிய பூமி.. என்று தொடங்கும் இந்த மெலோடி பாடல் சமூக
வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பாடலில் லிடியன் நாதஸ்வரம் கீபோர்டு
வாசித்துள்ளார்.
CLICK HERE TO WATCH THE SONG
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...