கல்லணை கால்வாய் - கல்லணையிலிருந்து வெண்ணாறு, வெட்டாறு, கொள்ளிடம் (உள்ளாறு) என காவிரி ஆறு மூன்றாக பிரியும். அதுதான் சோழப்பேரரசன் கரிகால் சோழன் கட்டிய கல்லணையின் அமைப்பு.
அதோடு சேர்த்து கூடுதலாக அமைக்கப்பட்டதுதான் கல்லணை கால்வாய்.
மேட்டூர் அணை கட்டப்பட்டபோது தஞ்சை மாவட்டத்தின் வானம் பார்த்த பூமியாக இருந்த ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர், அதிராம்பட்டினம்
புதுக்கோட்டை மாவட்டத்தின் கரம்பக்குடி, அறந்தாங்கி, ஆவுடையார் கோயில் ஒன்றியங்களில் சுமார் 2.50 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கும் வகையில் இந்த ஆறு வெட்டப்பட்டு 28.08.1934-ல் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
இந்த ஆற்றை அன்றைய பிரிட்டிஷ் அரசின் ராணுவப் பொறியாளர் கர்னல் டபிள்யூ.எம்.எல்லிஸ் தான் வடிவமைத்தார்.
கல்லணை தலைப்பில் தொடங்கி புதுக்கோட்டை மாவட்டம் தொண்டியில் உள்ள மும்பாலை வரையிலான 149 கி.மீ. நீளமுள்ள இந்த ஆற்றில், 109 கி.மீ. நீளம் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் வெட்டப்பட்டது. மீதம் உள்ளவை சுதந்திரத்திற்கு பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசால் வெட்டப்பட்டவை.
இந்த ‘ஏ’ கால்வாயிலிருந்து பி, சி, டி, இ என வெட்டப்பட்ட 337 கிளை வாய்க்கால்களின் மொத்த நீளம் 1,232 கி.மீ.
தஞ்சை பெரிய கோயில் கட்டிடக் கலையின் உச்சம் என்றால், இந்த ஆறு பாசனப் பொறியியலின் உச்சம். இது விவசாயத்துக்காக மனிதனால் வெட்டப்பட்ட கால்வாய்.
கல்லணையில் திறக்கப்படும் காவிரி நீர் தவிர்த்து இடையில் திடீரென மழைக்காலங்களில் வரும் காட்டாற்று தண்ணீரும் எளிதில் கலக்க முடியாத வகையில் ஆற்றின் குறுக்கே சைபன் (siphon) எனப்படும் சுரங்கங்களும், மேலே சூப்பர் பேஸேஜஸ் (super passages) எனப்படும் (மேல்நிலை கால்வாய்களும்). பெருவெள்ளக் காலங்களில் காட்டாற்று தண்ணீரை உள்வாங்கி வெளியேற்ற அக்யுடக்ட் (aqueduct) எனப்படும் கால்வாய் சுரங்கங்களும், தண்ணீரின் விசையை சீராக வைத்துக் கொள்ள 505 இடங்களில் டிராப் (drop) எனப்படும் நீரொழுங்கிகளும் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பெருவெள்ளக் காலங்களில் தண்ணீரை எளிதில் வெளியேற்றும் வகையில் இயற்கை இடர்பாடு மீட்பு தத்துவத்துக்கு உதாரணமாக இந்த கால்வாய் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆறு, முழுக்க முழுக்க பாசனத்துக்காக மட்டுமே வெட்டப்பட்டது. இயற்கையான ஆறுகள் பள்ளத்தை நோக்கியே ஓடும். ஆனால், இந்த ஆறு மேடான பகுதிகளுக்குள்ளும் புகுந்து செல்லும்.
கடைமடை வரை தண்ணீரை தடையில்லாமல் கொண்டு செல்லும் வகையில் கடல் மட்டத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட அடி உயரம் கொண்ட நிலப் பகுதிகளை வரைகோடுகள் மூலம் துல்லியமாக இணைத்து அதற்கேற்ப மேடான பகுதிகளை வெட்டி உருவாக்கப்பட்ட சமஉயர் (contour) கால்வாய் இது.
இதனால்தான், இந்த ஆறு தஞ்சை பெரிய கோயிலை ஒட்டி 30 ஆடி ஆழத்திலும், ஒரத்தநாடு திருவோணம் அருகே 30 அடி உயரத்திலும் செல்லும். பக்கவாட்டிலும், தரையிலும் சிமென்ட் சிலாபுகள் அமைக்கப்பட்டுள்ளதால் தண்ணீரின் திசைவேகம் (velocity) அதிகமாக இருக்கும். மேலே காண்பதற்கு நீரோட்டம் சலனமின்றி தெரிந்தாலும் அடி நீரோட்டம் அதிவேகமாக இருக்கும். அது மேலே தெரிவதைவிட கீழே 2-3 மடங்கு அதிகமாக இருக்கும்.
1995-ல் தஞ்சையில் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றபோது இந்த கால்வாயின் கரைகள் பலப்படுத்தப்பட்டு வெளியூர் மக்கள் பாதுகாப்பாக குளித்துச் செல்லும் வகையில் சிறப்பு நிதி ஒதுக்கி தஞ்சை நகருக்குள் புதுஆற்றின் அனைத்துப் படித்துறைகளிலும் இரும்புக் கம்பித் தடுப்புகள் அமைக்கப்பட்டது.
2012 மே மாதம் அப்போதைய முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் கல்லணை கால்வாய் பாசன பகுதிகள் மறுகட்டமைப்பு செய்ய 1560 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி சட்டசபையில் (விதி எண் 110ன் கீழ்) அறிவித்தார். ( ஆசிய வளர்ச்சி வங்கியிடம் பெற்ற கடன் - ரூ1092 கோடி + தமிழக அரசின் நிதி ரூ.468 கோடி)
இப்பணிகள் 2017ல் முடிந்து கல்லணை கால்வாய் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
படம் - சீரமைக்கப்பட்ட கல்லணை கால்வாயில் திறந்துவிடப்பட்ட 1000 கன அடி நீர் அழகாக செல்லும் காட்சி
அதோடு சேர்த்து கூடுதலாக அமைக்கப்பட்டதுதான் கல்லணை கால்வாய்.
மேட்டூர் அணை கட்டப்பட்டபோது தஞ்சை மாவட்டத்தின் வானம் பார்த்த பூமியாக இருந்த ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர், அதிராம்பட்டினம்
புதுக்கோட்டை மாவட்டத்தின் கரம்பக்குடி, அறந்தாங்கி, ஆவுடையார் கோயில் ஒன்றியங்களில் சுமார் 2.50 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கும் வகையில் இந்த ஆறு வெட்டப்பட்டு 28.08.1934-ல் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
இந்த ஆற்றை அன்றைய பிரிட்டிஷ் அரசின் ராணுவப் பொறியாளர் கர்னல் டபிள்யூ.எம்.எல்லிஸ் தான் வடிவமைத்தார்.
கல்லணை தலைப்பில் தொடங்கி புதுக்கோட்டை மாவட்டம் தொண்டியில் உள்ள மும்பாலை வரையிலான 149 கி.மீ. நீளமுள்ள இந்த ஆற்றில், 109 கி.மீ. நீளம் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் வெட்டப்பட்டது. மீதம் உள்ளவை சுதந்திரத்திற்கு பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசால் வெட்டப்பட்டவை.
இந்த ‘ஏ’ கால்வாயிலிருந்து பி, சி, டி, இ என வெட்டப்பட்ட 337 கிளை வாய்க்கால்களின் மொத்த நீளம் 1,232 கி.மீ.
தஞ்சை பெரிய கோயில் கட்டிடக் கலையின் உச்சம் என்றால், இந்த ஆறு பாசனப் பொறியியலின் உச்சம். இது விவசாயத்துக்காக மனிதனால் வெட்டப்பட்ட கால்வாய்.
கல்லணையில் திறக்கப்படும் காவிரி நீர் தவிர்த்து இடையில் திடீரென மழைக்காலங்களில் வரும் காட்டாற்று தண்ணீரும் எளிதில் கலக்க முடியாத வகையில் ஆற்றின் குறுக்கே சைபன் (siphon) எனப்படும் சுரங்கங்களும், மேலே சூப்பர் பேஸேஜஸ் (super passages) எனப்படும் (மேல்நிலை கால்வாய்களும்). பெருவெள்ளக் காலங்களில் காட்டாற்று தண்ணீரை உள்வாங்கி வெளியேற்ற அக்யுடக்ட் (aqueduct) எனப்படும் கால்வாய் சுரங்கங்களும், தண்ணீரின் விசையை சீராக வைத்துக் கொள்ள 505 இடங்களில் டிராப் (drop) எனப்படும் நீரொழுங்கிகளும் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பெருவெள்ளக் காலங்களில் தண்ணீரை எளிதில் வெளியேற்றும் வகையில் இயற்கை இடர்பாடு மீட்பு தத்துவத்துக்கு உதாரணமாக இந்த கால்வாய் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆறு, முழுக்க முழுக்க பாசனத்துக்காக மட்டுமே வெட்டப்பட்டது. இயற்கையான ஆறுகள் பள்ளத்தை நோக்கியே ஓடும். ஆனால், இந்த ஆறு மேடான பகுதிகளுக்குள்ளும் புகுந்து செல்லும்.
கடைமடை வரை தண்ணீரை தடையில்லாமல் கொண்டு செல்லும் வகையில் கடல் மட்டத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட அடி உயரம் கொண்ட நிலப் பகுதிகளை வரைகோடுகள் மூலம் துல்லியமாக இணைத்து அதற்கேற்ப மேடான பகுதிகளை வெட்டி உருவாக்கப்பட்ட சமஉயர் (contour) கால்வாய் இது.
இதனால்தான், இந்த ஆறு தஞ்சை பெரிய கோயிலை ஒட்டி 30 ஆடி ஆழத்திலும், ஒரத்தநாடு திருவோணம் அருகே 30 அடி உயரத்திலும் செல்லும். பக்கவாட்டிலும், தரையிலும் சிமென்ட் சிலாபுகள் அமைக்கப்பட்டுள்ளதால் தண்ணீரின் திசைவேகம் (velocity) அதிகமாக இருக்கும். மேலே காண்பதற்கு நீரோட்டம் சலனமின்றி தெரிந்தாலும் அடி நீரோட்டம் அதிவேகமாக இருக்கும். அது மேலே தெரிவதைவிட கீழே 2-3 மடங்கு அதிகமாக இருக்கும்.
1995-ல் தஞ்சையில் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றபோது இந்த கால்வாயின் கரைகள் பலப்படுத்தப்பட்டு வெளியூர் மக்கள் பாதுகாப்பாக குளித்துச் செல்லும் வகையில் சிறப்பு நிதி ஒதுக்கி தஞ்சை நகருக்குள் புதுஆற்றின் அனைத்துப் படித்துறைகளிலும் இரும்புக் கம்பித் தடுப்புகள் அமைக்கப்பட்டது.
2012 மே மாதம் அப்போதைய முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் கல்லணை கால்வாய் பாசன பகுதிகள் மறுகட்டமைப்பு செய்ய 1560 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி சட்டசபையில் (விதி எண் 110ன் கீழ்) அறிவித்தார். ( ஆசிய வளர்ச்சி வங்கியிடம் பெற்ற கடன் - ரூ1092 கோடி + தமிழக அரசின் நிதி ரூ.468 கோடி)
இப்பணிகள் 2017ல் முடிந்து கல்லணை கால்வாய் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
படம் - சீரமைக்கப்பட்ட கல்லணை கால்வாயில் திறந்துவிடப்பட்ட 1000 கன அடி நீர் அழகாக செல்லும் காட்சி