சென்னையில் கொரானா பாதிப்பு அதிகரித்து
வருவதால் சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்த உத்தரவிடக் கோரி வழக்கறிஞர்
தமிழரசு என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல்
செய்துள்ளார்.
அம்மனுவில்
கொரானா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை
நீட்டிக்கப்பட்டுள்ள போதும், சென்னையில் நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகமாக
இருக்கும் என செய்திகள் வெளியாகி வருகின்றன.
அதனால்,
சென்னையில் ஊரடங்கைத் தளர்த்துவதற்குப் பதில், ஊரடங்கை கண்டிப்புடன்
அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கோரியுள்ளார்.இந்த வழக்கு
விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.