சென்னை; தன்னார்வ பணிக்கு அனுப்பப்பட்ட ஆசிரியைக்கு, கொரோனா தொற்று
ஏற்பட்டதால், கொரோனா கட்டாய தன்னார்வ பணிக்கு செல்ல, ஆசிரியர்கள் மறுப்பு
தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்றை ஒழிக்கவும், அதன் பரவலை தடுக்கவும், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நோய் தொற்று பாதித்த குடும்பத்தினர் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டோருக்கு உதவ, தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.நிர்வாகப்பணி, தேர்வுப்பணி மற்றும் விடைத்தாள் திருத்தும் பணி இல்லாத ஆசிரியர்களுக்கு, சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் வாயிலாக, கொரோனா தன்னார்வ பணி வழங்கப்படுகிறது.
கொரோனா தொற்றை ஒழிக்கவும், அதன் பரவலை தடுக்கவும், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நோய் தொற்று பாதித்த குடும்பத்தினர் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டோருக்கு உதவ, தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.நிர்வாகப்பணி, தேர்வுப்பணி மற்றும் விடைத்தாள் திருத்தும் பணி இல்லாத ஆசிரியர்களுக்கு, சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் வாயிலாக, கொரோனா தன்னார்வ பணி வழங்கப்படுகிறது.
இந்நிலையில், சென்னை, அடையாறு மண்டலத்தில், சி.எம்.எஸ்., திடீர் நகர் அரசு பள்ளியை சேர்ந்த ஆசிரியை ஒருவர், தன்னார்வ பணியில் ஈடுபட்ட நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.அதனால், கொரோனா தன்னார்வ பணியில் இருந்து, ஆசிரியர்கள் விலக துவங்கியுள்ளனர். மாணவர்களுக்கு பாடங்கள் நடத்த வேண்டிய பணியில் உள்ள தங்களை, கட்டாய தன்னார்வ பணியில் இருந்து விடுவிக்குமாறு, கோரிக்கை விடுத்து உள்ளனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...