செ . கு . எண் : 126
நாள் : 23.07.2020
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு . எடப்பாடி K. பழனிசாமி
அவர்களின் அறிக்கை- 23.7.2020
தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு பயிலும்
மாணாக்கர்கள் , பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் பலவகை தொழில் நுட்பப்
பட்டயப் படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு தற்போதுள்ள சூழ்நிலையில் பருவத்
தேர்வு நடத்துவது குறித்து ஆராய உயர்மட்டக் குழு ஒன்று தமிழ்நாடு அரசால்
அமைக்கப்பட்டது .
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தேர்வு நடத்த இயலாத நிலை உள்ளதாக அக்குழு
தன்னுடைய பரிந்துரையை தெரிவித்துள்ளது . மாணாக்கர்களின் நலன் கருதி ,
பல்கலைக்கழக மானியக் குழு ( UGC ) மற்றும் அகில இந்திய தொழில் நுட்பக்
கல்விக் குழு ( AICTE ) ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி , மதிப்பெண்கள்
வழங்கி , - முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் இளங்கலை
பட்டப்படிப்பில் பயிலும் மாணாக்கர்களுக்கும் மற்றும் பலவகை தொழில் நுட்பப்
பட்டயப் படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கும் , - முதுகலைப் பட்டப்படிப்பில்
முதலாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும் , - இளநிலை பொறியியல்
பட்டப்படிப்பில் முதலாம் , இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும்
மாணாக்கர்களுக்கும் முதுநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு
பயிலும் மாணாக்கர்களுக்கும் , அதேபோன்று , எம்.சி.ஏ. முதலாம் மற்றும்
இரண்டாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும் இந்தப் பருவத்திற்கு மட்டும்
தேர்வில் இருந்து விலக்கு அளித்து அடுத்த கல்வி ஆண்டிற்குச் செல்ல
அனுமதிக்க நான் உத்தரவிட்டுள்ளேன் .
இது குறித்து விரிவான ஒரு அரசாணையை வெளியிட உயர்கல்வித் துறைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன் .
K. பழனிசாமி
தமிழ்நாடு முதலமைச்சர்
வெளியீடு : இயக்குநர் , செய்தி மக்கள் தொடர்புத்துறை , சென்னை -9