மகிழ்ச்சி பெறும் வழிகள்
சிவசூரியன். ஐ.ஏ.எஸ்
ஆசிரியத் தோழமையால் நான் படிப்பதற்காக வழங்கப்பட்ட புத்தகங்களில் ஒன்று
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்று வள்ளுவர் வாழ்க்கை பாதை அமைத்துக் காட்டுகிறார். அந்தப் பாதையை அடியொற்றி நல்ல பல அறக்கருத்துகளையும், அனுபவ கருத்துக்களையும், அழகுபட எடுத்துக்கூறி ஆற்றுப்படுத்தும் நூல் இது.
நூலிலிருந்து
நிகழ்காலத்தில் மட்டும் வாழ கற்றுக்கொண்டால் வாழ்க்கை முழுமையானதாக அமையும் மகிழ்ச்சியுடனும் முழு மனிதத் தன்மையுடன் வாழ முடியும்.
சிரிப்பு மனதை உற்சாகப்படுத்துகிறது. கலகலப்பாக வாழ்வை நடத்த வழி காட்டுகிறது.
வயது செல்லச் செல்ல தோல் சுருங்கி விடும். அதுபோல் மகிழ்ச்சி குறையக் குறைய வாழ்க்கையும் சுருங்கிவிடும்.
வாழ்க்கையில் வெற்றிகளே கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவன் குழந்தைப் பருவத்தைத் தாண்டாதவன். தோல்விகளை மட்டுமே எதிர்பார்ப்பவன் வளர்ச்சியடையாதவன்
இருக்கின்ற படி வாழ்க்கையை வாழ கற்றுக்கொள்ளுங்கள். மகிழ்ச்சியான மனிதன் என்பவன் எதையும் முழுமையாக செய்யத் தெரிந்தவன்.
மனிதன் மகிழ்ச்சியாக இருக்கும்போது
சிறப்பாக சிந்திக்கிறான்
சிறப்பாக திட்டமிடுகிறான்
சிறப்பாக செயல்படுகிறான்
ஆரோக்கியமாக இருக்கிறான்
உலகம் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்கின்ற முடிவுக்கு நீங்கள் வந்துவிட்டால் ஒவ்வொரு பொழுதும் நல்ல பொழுதாக விடியும்.
மற்றவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அதற்கு உதாரணமாக நீங்கள் இருங்கள்.
யாராவது ஒருவரை மகிழ்ச்சிப்படுத்த உங்கள் ஆற்றல் அத்தனையையும் அர்ப்பணியுங்கள். உங்களிடம் மகிழ்ச்சி நிச்சயமாக தானே வந்து சேரும்.
சோம்பலுக்கு கதவை திறக்காதீர்கள். சுறுசுறுப்பான வாழ்க்கை, மகிழ்ச்சியான வாழ்க்கை என்பதை மறந்து விடாதீர்கள்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பது உலகறிந்த நன்மை. வெற்றியும், தோல்வியும், ஏமாற்றமும், மன அமைதியும், நம்மிடமே உள்ளன. அவைகளை வெளியில் தேட வேண்டிய அவசியம் இல்லை.
வாழ்வியலில் வெற்றி தோல்விகள் இயல்பானவை .
தடைகளை கண்டு அஞ்சுவது அறியாமை. தயக்கமும், பயமும் கவலைகளுக்கு முன்னோடியாக இருக்கின்றன.
வேண்டாததை கூண்டோடு விரட்டுங்கள்
தடைகளை உடைத்து முன்னேறுங்கள்
மனித உறவுகளுக்கு மதிப்பு கொடுங்கள்
நாம் வாழ்வில் வெற்றி அடைய மனித உறவுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை சொல்லும் நூல் இது.
தோழமையுடன்
சீனி.சந்திரசேகரன்









