சென்னை; தமிழகத்தில், நேற்று ஆபரண தங்கம் விலை, சவரனுக்கு, 336 ரூபாய் அதிகரித்து, 43 ஆயிரத்து, 328 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
சர்வதேச முதலீட்டாளர்கள், தங்கம், வெள்ளியில், அதிக முதலீடு செய்து வருகின்றனர். இதனால், சர்வதேச சந்தையில் அவற்றின் விலை உயர்ந்து வருவதால், உள்நாட்டிலும், இரு மதிப்பு மிகு உலோகங்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம்,
கிராம், 5,374 ரூபாய்க்கும்; சவரன், 42 ஆயிரத்து, 992 ரூபாய்க்கும்
விற்பனையாகின. கிராம் வெள்ளி, 81.60 ரூபாய்க்கு விற்கப்பட்டது.இந்நிலையில்,
நேற்று தங்கம் விலை கிராமுக்கு, 42 ரூபாய் உயர்ந்து, 5,416 ரூபாய்க்கு
விற்பனையானது. சவரனுக்கு, 336 ரூபாய் அதிகரித்து, முதல் முறையாக, 43 ஆயிரம்
ரூபாயை தாண்டி, 43 ஆயிரத்து, 328 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கிராம்
வெள்ளி, 2 ரூபாய் உயர்ந்து, 83.60 ரூபாய் என்ற, புதிய உச்சத்தை
எட்டியுள்ளது.சர்வதேச முதலீட்டாளர்கள், தங்கம், வெள்ளியில், அதிக முதலீடு செய்து வருகின்றனர். இதனால், சர்வதேச சந்தையில் அவற்றின் விலை உயர்ந்து வருவதால், உள்நாட்டிலும், இரு மதிப்பு மிகு உலோகங்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.