“பள்ளிகள் திறப்பது குறித்து யோசிக்கவே முடியாது!”மனம் திறக்கிறார் கல்வி அமைச்சர் -விகடன் : - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Sunday 9 August 2020

“பள்ளிகள் திறப்பது குறித்து யோசிக்கவே முடியாது!”மனம் திறக்கிறார் கல்வி அமைச்சர் -விகடன் :





செங்கோட்டையன்




செங்கோட்டையன்
மனம் திறக்கிறார் செங்கோட்டையன்
பிரீமியம் ஸ்டோரி தினம் ஓர் அறிவிப்பை வெளியிடுவதும், அதே வேகத்தில் அவற்றைத் திரும்பப் பெறுவதும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு கைவந்த கலை. இது பலத்த விமர்சனங்களை ஏற்படுத்தினாலும், அதற்கெல்லாம் அசராமல் வலம்வருகிறார் அமைச்சர். அவரைப் பேட்டி எடுப்பதற்காக கோபிசெட்டிபாளையத்திலுள்ள அவரது பண்ணை வீட்டில்வைத்து சந்தித்தோம். மனிதர் உஷாராக, “என் துறையைத் தவிர வேறு எதைப் பற்றியும் பேச மாட்டேன்” என்றபடி பேட்டிக்குத் தயாரானார். “சமீபகாலமாக மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் வகையிலேயே உங்கள் துறையின் செயல்பாடுகள் இருக்கின்றனவே?”
“புதிய திட்டங்களைக் கொண்டுவரும்போது விமர்சனங்கள் வரத்தான் செய்யும். அவற்றைப் புரிந்துகொண்டு, சில அறிவிப்புகளைத் திரும்பப் பெறுகிறோம். அரசின் கடமை இது. அதேசமயம் அந்தப் புதிய திட்டங்கள் சரியாக செயல்படுத்தப்படுகின்றனவா என்பதை அறிந்துகொள்வதற்கு, அவற்றை நடைமுறைப்படுத்த எங்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும்.”
“பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் விரைவில் வரவிருக்கிறது. ஆனால் காலாண்டு, அரையாண்டு தேர்வு கேள்வித்தாள்களை மறுபடியும் மாணவர்களுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பிவைத்து, வீட்டிலேயே தேர்வு எழுதிவரச் சொல்லி மோசடிகள் நடப்பதாகச் செய்திகள் வந்தனவே?”
“தனியார் பள்ளிகளில் இப்படி நடைபெற்றதாகச் செய்திகள் வந்தன. இப்படிச் செய்பவர்கள்மீது நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம். விடைத்தாள்களில் மாணவர்களின் கையொப்பம், பெற்றோர்களின் கையொப்பம் ஆகியவை இருக்கும். எனவே, மோசடி செய்பவர்கள் அவற்றையும் திருத்த வேண்டியிருக்கும் என்பதால் நீங்கள் சொல்வது போன்ற தவறுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் இல்லை.’’
“கொரோனா ஊரடங்குச் சூழலிலும் தனியார் பள்ளிகள் கட்டணம் கட்டச் சொல்லி பெற்றோர்களுக்கு நெருக்கடி கொடுக்கிறார்களே..?”
“இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கிறது. வழக்கு முடிந்த பிறகு முதலமைச்சர் கவனத்துக்கு எடுத்துச் சென்று இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண்போம்.”
“முதலில் ‘ஆன்லைன் வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றீர்கள். பிறகு, ‘அதை நாம் தடுக்க முடியாது’ என்றீர்கள். இப்போது என்ன நிலைப்பாட்டில் இருக்கிறீர்கள்?”
“அன்றைய சூழலில் நான் பேசியது தவறாக வெளியிடப்பட்டுவிட்டது. ‘தனியார் பள்ளிகள் கட்டணம் செலுத்தாத மாணவர்களை ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ளத் தடை விதித்தால், அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றுதான் குறிப்பிட்டேன். ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக எதையும் பேசவில்லை. இன்றைய சூழலில் ஆன்லைன் வகுப்புகளை விட்டால் வேறு வழியே கிடையாது.”
“ `தனியார் செட்-டாப் பாக்ஸ்களில் தமிழக அரசின் கல்விச் சேனல்கள் தெரிவதில்லை’ என்று சொல்லப்படுகிறது, பிறகு எப்படி அரசுப் பள்ளி மாணவர்கள் கல்விச் சேவையைப் பெற முடியும்?”
“அடுத்த மாதம் ஓர் அட்டவணை வெளியிடப்படும். அதில் 14 சேனல்கள் இடம்பெறும். எந்தெந்த வகுப்புகளுக்கு, எந்தெந்த சேனல் மூலமாகப் பாடம் கற்றுத்தரப்படும் என்பதையும் அப்போது அறிவிப்போம். சேனல்கள் மட்டுமன்றி, அரசின் இலவச லேப்டாப், பாடப் புத்தகங்களிலுள்ள ‘க்யூஆர்’ கோடு ஆகியவற்றைப் பயன்படுத்தியும் அரசுப் பள்ளி மாணவர்கள் கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.”

செங்கோட்டையன்
“ஆனால் செல்போன், இணையம், தொலைக்காட்சி வசதிகளே இல்லாத மலைக்கிராமப் பகுதி மாணவர்களுக்கு நீங்கள் சொல்லும் வசதிகள் எப்படிச் சாத்தியமாகும்?”
“எந்தெந்த மலைக்கிராமப் பகுதிகளில் ஆன்லைன் மூலமாகவோ, தொலைக்காட்சி வழியாகவோ மாணவர்களுக்குக் கல்வி கிடைக்கவில்லை என்று சொன்னால், அவர்களுக்கு எப்படிக் கல்வியைக் கொண்டு சேர்ப்பது என யோசித்து நிறைவேற்றுவோம்.”
“ `தனியார் பள்ளிகள் அரசு உத்தரவுகளுக்குக் கட்டுப்படுவதில்லை’ என்று விமர்சனங்கள் வருகின்றன. பல தனியார் பள்ளிகள் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கையை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வருகின்றனவே?”
“அதற்கான வாய்ப்புகள் இல்லை. அரசின் நடவடிக்கைகளைப் பார்த்து ‘சிரமமான சூழலில் இருக்கிறோம். எங்களுடைய நிறுவனம் நடக்குமா, நடக்காதா என்று அஞ்சுகிறோம்’ என்றுதான் பல தனியார் பள்ளிகள் எங்களிடம் கோரிக்கை வைக்கின்றன. நாங்கள் கறாராகத்தான் இருக்கிறோம்.”
“பள்ளிகள் எப்போது திறக்கப்படும், திறக்கப்பட்ட பிறகு குழந்தைகள் பாதுகாப்புக்கு என்ன மாதிரியான நடைமுறைகள் கையாளப்படும்?”
“கொரோனா சூழல் மாறிய பிறகுதான் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்துப் பரிசீலிக்க இயலும். இப்போதைக்கு அது குறித்து யோசிக் கவே முடியவில்லை. இயல்புநிலை திரும்பிய பிறகு மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து பாதுகாப்பு முறைகளை அறிவிப்பார்கள்.”
“அடுத்த கல்வியாண்டில் பள்ளி வேலை நாள்கள் குறைவாகவே இருக்கும். எனவே, பாடத்திட்டங்கள், தேர்வு முறைகளில் என்னென்ன மாற்றங்களைச் செய்யவிருக் கிறீர்கள்?”
“இப்போது எதைச் சொன்னாலும் விமர்சனங்கள் வரும். எனவே, நாங்கள் எதையும் சொல்வதைக் காட்டிலும் செயல்படுத்துவதுதான் சரியாக இருக்கும்.”

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H