முன்னொரு காலத்தில் ஒரு வியாபாரி தனக்கு பயணம் செய்ய ஒட்டகம் வாங்குவதற்காக சந்தைக்கு போனான்.
அங்கே இருந்த ஒரு ஒட்டக வியாபாரியிடம் அப்படி இப்படி என பேரம் பேசி நல்ல விலைக்கு ஒட்டகத்தை வாங்கி கொண்டு வீட்டுக்கு ஓட்டி வந்தான்.!
ஒட்டகம் வாங்கி வந்த வியாபாரிக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.! நியாயமான விலையில் நல்ல தரமான ஒட்டகம் கிடைத்தது என்று.!
தனது வீட்டுக்கு வந்ததும் தன் வேலைக்காரனை அழைத்து ஒட்டகத்தை கொட்டிலில் அடைக்க சொன்னான்.!
அதற்கு முன்பாக ஒட்டகத்தின் மேலிருந்த பழைய சேணத்தை அவிழ்க்க முயற்சித்தான்.! அவனால் முடியவில்லை.!
தனது வேலைக்காரனை அழைத்து ஒட்டகத்தின் பழைய சேணத்தை அவிழ்க்க சொன்னான்..!
ஒட்டகத்தின் மீதிருந்த சேணத்தை அவிழ்த்தான் வேலைக்காரன் அப்போது பொத்., என ஏதோ கீழே விழுவதைக் கண்டு எடுத்துப் பார்த்தான்.!அங்கே இருந்த ஒரு ஒட்டக வியாபாரியிடம் அப்படி இப்படி என பேரம் பேசி நல்ல விலைக்கு ஒட்டகத்தை வாங்கி கொண்டு வீட்டுக்கு ஓட்டி வந்தான்.!
ஒட்டகம் வாங்கி வந்த வியாபாரிக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.! நியாயமான விலையில் நல்ல தரமான ஒட்டகம் கிடைத்தது என்று.!
தனது வீட்டுக்கு வந்ததும் தன் வேலைக்காரனை அழைத்து ஒட்டகத்தை கொட்டிலில் அடைக்க சொன்னான்.!
அதற்கு முன்பாக ஒட்டகத்தின் மேலிருந்த பழைய சேணத்தை அவிழ்க்க முயற்சித்தான்.! அவனால் முடியவில்லை.!
தனது வேலைக்காரனை அழைத்து ஒட்டகத்தின் பழைய சேணத்தை அவிழ்க்க சொன்னான்..!
அது ஒரு சிறிய பொக்கிஷப்பை.! உள்ளே பிரித்துப் பார்த்ததில்., ஆச்சரியத்தால் அவன் கண்கள் விரிந்தது.! அதனுள் விலை மதிப்பற்ற நவரத்தின கற்கள்.! தகதகவென மின்னியது.!
அதை எடுத்து கொண்டு போய் முதலாளியிடம் காண்பித்தான்.!
உடனே வியாபாரி., அந்த பையை இப்படி கொடு., உடனே அந்த ஒட்டக வியாபாரியிடம் கொண்டு போய் கொடுக்கணும் என்று சொல்லி விட்டு புறப்பட்டான்.!
உடனே அந்த வேலைக்காரனோ., 'ஐயா இது யாருக்கும் தெரியப் போவதில்லை.! இது இறைவனின் பரிசு.! நீங்களே வைத்து கொண்டால் என்ன..? என வற்புறுத்தினான்.!
அதற்கு அந்த வியாபாரி ஒத்துக் கொள்ளாமல் புறப்பட்டு போனான்.!
ஒட்டக வியாபாரியிடம் கொண்டு போய் சேணத்தை அவிழ்த்த போது கிடைத்த பொக்கிஷப் பையை கொடுத்ததும் நன்றியோடு வாங்கி கொண்டவன்,! அந்த பொக்கிஷப் பையை வியாபாரியிடம் கொடுத்து., உங்கள் நேர்மையை நான் மெச்சுகிறேன்.!
தங்களுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்புகிறேன்.! இதிலிருந்து உங்களுக்கு பிடித்தமான கற்கள் சிலவற்றை எடுத்து கொள்ளுங்கள் என்று நீட்டினான்.!
அதற்கு அந்த வியாபாரியோ சிரித்து கொண்டே உங்களிடம் இந்த பொக்கிஷத்தை தரும் முன்பே இரண்டு விலையுயர்ந்த ரத்தினங்களை நான் வைத்து கொண்டேன் என்றான்.!
உடனே ஒட்டக வியாபாரியோ கற்களை எண்ணிப் பார்த்து விட்டு எதுவுமே குறையவில்லை. சரியாக இருந்தது கண்டு குழம்பினான்.!
உடனே அந்த வியாபாரி நான் சொன்ன இரண்டு ரத்தினங்கள்...
1. எனது நேர்மை.
2. எனது சுயமரியாதை என்றான் கம்பீரமாக.
நேர்மையாளனாக வாழ்வது பெரிய விஷயமல்ல. தவறு செய்யக்கூடிய சந்தர்ப்பமும், வாய்ப்பும், வாய்த்தாலும் நேர்மையாக வாழ வேண்டும்.!
வாழ்வில் ஒரு நாள் நேர்மையையாய் வாழ்ந்து பார்த்தால் அதன் ருசியை நாம் உணர்ந்து விட்டால்., நாம் எதற்காகவும் நேர்மையை இழக்க மாட்டோம். என்றென்றும் அன்புடனும்...